Connect with us

அந்த விஷயத்தில் த்ரிஷாவை நிராகரித்த விஜய்… கண்ணீர் விட்டு அழுத த்ரிஷா..

trisha vijay

News

அந்த விஷயத்தில் த்ரிஷாவை நிராகரித்த விஜய்… கண்ணீர் விட்டு அழுத த்ரிஷா..

Social Media Bar

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே விஜய்யும் த்ரிஷாவும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். விஜய் ஒரு நடிகையுடன் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் என்றால் அது திரிஷாவாகதான் இருக்கும்.

அத்தனை திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இன்னமும் கூட அடுத்து விஜய் கோட் திரைப்படத்திற்கு பிறகு நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று பேச்சுக்கள் இருந்தது.

ஆனால் தற்சமயம் சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது ஏனெனில் தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா குறித்து நிறைய கிசுகிசுகளும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக வெகு காலங்களாகவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

த்ரிஷா சர்ச்சை:

vijay trisha
vijay trisha

சமீபத்தில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் போட்டோ வெளியிட்டபோது கூட அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு திரிசா மற்றும் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார்.

போக்கிரி திரைப்படத்தில் அசின் கதாநாயகியாக நடிக்க இருந்த பொழுது திரிஷாவிற்கு அதனால் அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போக்கிரி படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அந்த படத்திற்கு சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு திரிஷாவை அழைப்பார்கள் என்று திரிஷா ஆவலுடன் காத்திருந்தாராம். ஆனால் கடைசிவரை அவருக்கு அந்த படத்திற்காக அழைப்பிதழே வரவில்லை.

அப்செட்டான திரிஷா:

ஏன் படத்தின் வெற்றி விழாவிற்கு திரிஷாவைஅழைக்கவில்லை என கேட்ட பொழுது திரிஷாவின் பெயர் லிஸ்ட்டில் இல்லை என கூறிவிட்டனர். இயக்குனர் பிரபு தேவாவிடம் இது குறித்து கேட்ட பொழுது விஜய் சார் கால் செய்வார் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு விஜய் கண்டிப்பாக அழைப்பார் என்று காத்திருந்தார் த்ரிஷா. ஆனால் விஜய் அவரை அழைக்கவே இல்லை இதனால் கவலைப்பட்ட திரிஷா அப்பொழுது கண்ணீர் விட்டு அழுது புலம்பி இருக்கிறார்.

அதற்கு பிறகு விஜய்க்கு போன் செய்த த்ரிஷாவின் அம்மா திரிசாவுடன் ஒரு படம் தோல்வி அடைந்தவுடன் அவரை இப்படி ஓரங்கட்டிவிட்டிர்களே தம்பி என்று கேட்டிருக்கிறார். ஏனெனில் அதற்கு முன்பு திரிஷாவுடன் ஜோடியாக இவர் நடித்த ஆதி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதற்கு பிறகு ஹோட்டலில் திரிஷாவை சந்தித்து சமாதானப்படுத்தினாராம் விஜய். அவர்களது வீடியோ ஒன்று கூட பொழுது வைரலானதாக கூறுகிறார் செய்யாறு பாலு.

Articles

parle g
madampatty rangaraj
To Top