Connect with us

என் வீட்டுக்கே வந்து ரூமுக்கு கூப்பிட்டான்!.. டிவி நிகழ்ச்சியால் வரலெட்சுமி சரத்குமாருக்கு நடந்த சோகம்!..

varalaxmi sarathkumar1

Cinema History

என் வீட்டுக்கே வந்து ரூமுக்கு கூப்பிட்டான்!.. டிவி நிகழ்ச்சியால் வரலெட்சுமி சரத்குமாருக்கு நடந்த சோகம்!..

cinepettai.com cinepettai.com

Varalaxmi sarathkumar: தமிழில் போடா போடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் வரலெட்சுமி சரத்குமார். இவர் சரத்குமாரின் மகள் ஆவார். போடா போடி திரைப்படம் வெளியானப்போது பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு அதிகமாக பேசப்பட்ட ஒரு திரைப்படமாக அது இருந்தது.

இது இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வரலெட்சுமி சரத்குமாருக்கு ஓரளவு வரவேற்புகள் வர துவங்கின. இந்த நிலையில் அவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

நிறைய வில்லி கதாபாத்திரங்களும் அவருக்கு கிடைத்தன. ஆனால் தாரை தப்பட்ட திரைப்படத்தில் அவர் நடித்த நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்காக தன்னை அழைக்க வந்தவர் செய்த காரியத்தை பகிர்ந்துள்ளார் வரலெட்சுமி சரத்குமார்.

டிவி நிர்வாகி செய்த வேலை:

ஒருமுறை ஒரு டிவி நிறுவனத்தின் நிர்வாகி வரலெட்சுமி சரத்குமாரை நேரில் சந்திப்பதற்கு வந்திருந்தார். ஒரு டிவி நிகழ்ச்சியை வரலெட்சுமி சரத்குமார் தொகுத்து வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். வரலெட்சுமி சரத்குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஆனால் அந்த நிர்வாகி அதனுடன் முடிக்கவில்லை. மற்ற விஷயங்களை எல்லாம் வேறு எங்கு பேசுவது என கேட்டுள்ளார். மற்ற விஷயங்கள் என்றால் என்ன என வரலெட்சுமி சரத்குமார் கேட்டப்போது லாட்ஜில் ரூம் போடலாமா என அந்த நிர்வாகி கூறியுள்ளார்.

இதனை ஒரு பேட்டியில் பகிரும் வரலெட்சுமி சரத்குமார் கூறும்போது ஒரு பெரிய பேக்ரவுண்ட் உள்ள நடிகை என்னிடமே அப்படி கேட்கிறார்கள் என்றால் மற்ற பெண்களின் நிலையை யோசித்து பாருங்கள் என கூறியுள்ளார்.

POPULAR POSTS

rajinikanth
samuthrakani pa ranjith
rajinikanth
modi thiagaraja kumararaja
kamalhaasan gautham menon
vk ramasamy mgr
To Top