Connect with us

நல்லப்படியாக நான் பாடல் வரிகள் எழுத இதுதான் காரணம்!.. வாலிக்கு சீக்ரெட்டை சொல்லி கொடுத்த எஸ்.எஸ் வாசன்!..

poet vaali

Cinema History

நல்லப்படியாக நான் பாடல் வரிகள் எழுத இதுதான் காரணம்!.. வாலிக்கு சீக்ரெட்டை சொல்லி கொடுத்த எஸ்.எஸ் வாசன்!..

cinepettai.com cinepettai.com

Poet Vaali : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி 2 கே கிட்ஸ் காலகட்டம் வரையிலும் சினிமாவில் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி மட்டும்தான்.

வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. பழைய காலகட்டங்களில் அப்போது இருந்த மக்களுக்கு பிடிக்கும் வகையில் பாடல் வரிகளை எழுதினார் வாலி. ஆனால் அதே வாலி கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கு பிடிக்கும் வகையில் திரும்பத் திரும்ப பாடல் வரிகளை எழுதி வந்தது பெரிய விஷயம் என்று கூறலாம்.

எப்படி இப்படி ஒரு சிறப்பான திறன் வாலி இருக்கிறது என கேட்கும் பொழுது அதற்கு ஒரு சிறப்பான பாதிலை வாலி கொடுத்து இருந்தார். ஆனந்த விகடன் பத்திரிகையின் சொந்தக்காரரான எஸ்.எஸ் வாசன் வாலியுடன் பேசும்பொழுது ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

Vaali-2

அப்போது எஸ்.எஸ். வாசனின் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. இது குறித்து வாலி ஒரு முறை எஸ் எஸ் வாசனிடம் கேட்ட பொழுது நான் ஒவ்வொரு திரைப்படத்தையும் எனது முதல் திரைப்படம் போலவே பணியாற்றுவேன்.

எப்போதும் நமது முதல் திரைப்படத்தில் முழு ஈடுபாட்டோடு நாம் வேலை பார்ப்போம். அப்படியாகதான் எனது ஒவ்வொரு திரைப்படத்தையும் இயக்குகிறேன். அதுதான் எனது படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

தன் பிறகு வாலியும் கூட தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தையும் தனது முதல் திரைப்படமாக நினைத்து பணியாற்ற துவங்கியிருக்கிறார். அப்போது வாலி மிகவும் பிரபலம் என்பதால் அவர் எப்படி பாடல் வரிகள் எழுதிக் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனாலும் அவர்களுக்கு சிறப்பான பாடல் வரிகளை ஒவ்வொரு படத்திலும் எழுதி கொடுத்திருக்கிறார் வாலி. அதற்கு எஸ் எஸ் வாசன் சொன்ன இந்த சீக்ரெட்தான் காரணம் என்று கூறுகிறார் வாலி.

POPULAR POSTS

sree leela
modi sathyaraj
vengat prabhu goat
gv prakash ar rahman
sathyaraj ks ravikumar
tamil actress
To Top