Cinema History
ஓ வடிவேலுதான் பிரச்சனையா!.. பேக்கப் பண்ணி காரில் அனுப்பிய பார்த்திபன்!.. ட்ரிக்கான ஆளா இருப்பார் போல!.
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் வடிவேலு. கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களை போலவே வடிவேலுவும் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பை தேடி வந்தார்.
அப்படி தேடி வரும்போது சினிமாவில் வாய்ப்பை பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிந்துக்கொண்டார் வடிவேலு. எனவே நடிகர் ராஜ்கிரணின் உதவியோடு முதலில் சினிமாவில் வாய்ப்பை பெற்று வந்த வடிவேலு பிறகு தொடர்ந்து முயற்சித்து பெரும் காமெடி நடிகரானார்.
ஆனால் காமெடி நடிகரான பிறகு வடிவேலு நிறைய பிரச்சனைகள் செய்ததாக அவருடன் நடித்த நடிகர்கள் பலரே கூறியுள்ளனர். முக்கியமாக அவர் திரையில் தெரியும்போது மற்ற எந்த காமெடி நடிகரும் அவரை விட சிறப்பாக நடித்துவிட கூடாது என நினைப்பவர் வடிவேலு.
இந்த நிலையில் வடிவேலுவால் தனக்கு நடந்த அனுபவம் குறித்து நடிகர் பெஞ்சமின் தனது பேட்டியில் கூறியுள்ளார். வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டப்போது அதில் வடிவேலு அவரை நடிக்கவே விடவில்லையாம்.
இந்த நிலையில் ஏன் ஒழுங்காக நடிக்க மாட்டேன் என்கிறீர்கள் என அவரிடம் கேட்டுள்ளார் பார்த்திபன். அப்போது அவர் கூறும்போது வடிவேலு நடிக்க விட மாட்டேங்குறார் என கூறியுள்ளார். உடனே வடிவேலுவின் ட்ரைவரை அழைத்த பார்த்திபன், அவரை வெளியே அழைத்து செல்லுமாறு கூறினார்.
பிறகு வடிவேலு வெளியே சென்றப்பிறகு பெஞ்சமினை வைத்து அந்த காட்சியை படமாக்கி இருக்கின்றனர்.