Cinema History
ரவுடிகளை அழைச்சிட்டு வந்து என்னை அடிச்சாரு!.. வடிவேலுவிடம் தனியாக சிக்கிய காதல் சுகுமார்!..
Acror Vadivelu : தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களிலேயே அதிகமாக மக்களால் விரும்பப்படும் ஒரு நடிகராக வடிவேலு இருக்கிறார். ஆனால் மக்கள் திரையில் மட்டுமே விரும்பும் ஒரு நடிகராக வடிவேலு மாறி இருக்கிறார். ஏனெனில் நிஜ வாழ்க்கையில் வடிவேலு குறித்து நிறைய விமர்சனங்கள் மக்கள் மத்தியில் இருக்கின்றன.
வடிவேலுவுடன் பணிபுரிந்த பலரும் இப்போதுதான் வடிவேலுவின் நிஜ முகத்தை வெளியில் பேசுகின்றனர். இதற்கு முன்பு சமூக வலைதளங்கள் இந்த அளவிற்கு பெரிதாக இல்லாத காரணத்தினால் வடிவேலு குறித்து பெரிதாக மக்கள் மத்தியில் எதுவும் தெரியாமல் இருந்தது. ஆனால் வடிவேலுவுடன் பணிபுரிந்த பலரும் youtube பேட்டிகளில் பேசும்பொழுது அவரைக் குறித்த பல சர்ச்சையை ஏற்படுத்தும் விஷயங்களை பேசி இருந்தனர்.
அதில் காதல் திரைப்படத்தில் நடித்த சுகுமார் கூறியிருப்பது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே சுகுமார் நடித்தார் அவருக்கு ஒரு அடையாளமாக இருந்த படம் காதல்.
அந்த திரைப்படத்தில் நடிகர் பரத்திற்கு நண்பனாக நடித்திருப்பார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அவரை ஒருநாள் சந்தித்த வடிவேலு அவரிடம் பேசும் பொழுது என்னைப் போலவே நீ நடிக்கிறாய் என்று கேள்விப்பட்டேனே? எனக் கேட்ட பொழுது ஆமாம் சார் உங்களை போல நான் நடிப்பேன் என்று எல்லாருக்கும் தெரியும் சினிமாவிற்கு வந்த பிறகு நான் அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார் சுகுமார்.
ஆனால் நீ காதல் திரைப்படத்திலேயே அப்படித்தானே நடித்திருந்தாய் என வடிவேலு கேட்க ஆமாம் சார் அதில் வாய்ப்பு கிடைத்தது வேறு வழி இல்லாமல் உங்களை போலவே நடித்து விட்டேன் என கூறவும் அங்கிருந்த ஆட்கள் சுகுமாரை அடித்து இருக்கின்றனர் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்த சுகுமார் அந்த நாளை மற்றும் மறக்கவே மாட்டேன் அன்று நான் வடிவேலுவுடன் ஊரைவிட்டு ஓடிவிடுகிறேன் எனக் கூறிய பிறகுதான் அவர் என்னை விட்டார் என்று கூறுகிறார் காதல் சுகுமார்.
Source: Link