Latest News
தொழில்நுட்பம்தான் தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்!.. கடுப்பான வைரமுத்து!..
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சில சமயங்களில் சாதகமான அம்சமாக இருந்தாலும் பல சமயங்களில் அதனால் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஆனால் சினிமா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை உலக அளவில் வந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இன்னமும் தொழில்நுட்ப வளர்ச்சி இன்னமும் வரவில்லை என்றே கூறலாம்.
ஆனால் கவிஞர் வைரமுத்து சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தொழில்நுட்ப வளர்ச்சிதான் தமிழ் சினிமாவை சீரழித்துவிட்டது என்கிறார். அந்த பேட்டியில் அவர் பேசும்போது திரையரங்குகள் திரைப்படங்களை ஒளிப்பரப்புவதிலேயே பிரச்சனைகள் உண்டாகியுள்ளது.
இப்படிதான் ஒரு திரைப்படத்திற்கு 5 நபர்கள் வந்துவிட்டனர். ஆனால் 11 நபர்கள் வந்தால்தான் அந்த ஷோவை போட முடியும் என கூறிவிட்டனர் திரையரங்க அலுவலர்கள். இதனால் காத்திருந்தனர் அந்த நபர்கள். எதனால் இது நடக்கிறது.
11 நபர்கள் வந்தால்தான் அந்த திரையரங்கால் அந்த காட்சிக்கான மின்சார கட்டணத்தையே எடுக்க முடியும். தொழில்நுட்ப வளர்ச்சிதான் இந்த சீர்க்கேட்டுக்கு காரணம். தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதி பேர் செல் போனில் படத்தை பார்க்கின்றனர், பாதி பேர் கணினியில் பார்க்கின்றனர். இன்னும் பலர் ஓ.டி.டியில் பார்க்கின்றனர்.
இந்த நிலை மாற வேண்டும் அப்போதுதான் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்கள் என கூறியுள்ளார் வைரமுத்து.