ரசிகர்களை மரியாதை இல்லாமல் நடத்தும் விஜய் சேதுபதி..! வெளிப்படையாய் கூறிய  பிரபலம்.!

தொடர்ந்து தமிழில் விடுதலை, மகாராஜா என தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. அதே போல தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்துவ் வித்தியாசமாக வரும் வேறு வகையான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் இவருக்கு கதாநாயகனாக நடிப்பதை விடவும் இப்போது வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இதனால் விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிப்பதில்லை என முடிவு எடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மாஸ்டர், விக்ரம் மாதிரியான இரண்டு திரைப்படங்களிலுமே க்ளைமேக்ஸில் விஜய் சேதுபதி இறந்துவிடுவார்.

எனவே இனிவரும் எல்.சி.யு படங்களில் இவர் இருப்பதற்கும் வாய்ப்பில்லை. எனவே தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் அடுத்து இவர் நடித்த மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாக இருக்கிறது.

விஜய் சேதுபதியின் செயல்:

vijay sethupathi
vijay sethupathi
Social Media Bar

சீனாவில் கண்டிப்பாக இந்த படம் 1000 கோடி வசூல் செய்யும் என பேச்சுக்கள் இருக்கின்றன. தொடர்ந்து விடுதலை படத்தின் அடுத்த பாகமும் அடுத்த மாதம் திரையரங்கிற்கு வர இருக்கிறது. இதில் வாத்தியார் என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் வெற்றிமாறன் கோபமடைந்ததை அடுத்து அதிக சர்ச்சையானது. இதுக்குறித்து பத்திர்க்கையாளர் அந்தணன் சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இருவருமே மரியாதை தெரியாமல் இருக்கின்றனர்.

இவர்கள் இருவருமே ரசிகர்களை போடா வாடா என மரியாதை இல்லாமல் அழைக்கின்றனர். பெரிய ஹீரோக்களே இப்படி செய்வதில்லை என கூறினார். அதற்கு பேட்டி எடுப்பவர் ரசிகர்களுடன் நெருக்கமாக காட்டி கொள்வதற்காக அவர் அப்படி அழைத்திருக்கலாம் அல்லவா என கேட்டார்.

அதற்கு பதிலளித்த அந்தணன் அதே போல ரசிகனும் நினைத்தால் விஜய் சேதுபதி நிலை என்னவாகும் என கேட்டுள்ளார்.