Cinema History
இளையராஜாவுக்கு அப்புறம் அதை பலரும் செய்யல!.. நான் செஞ்சேன்!. மியூசிக்கில் இன்றைய தலைமுறை தவறவிட்ட விஷயம்!.. வித்யாசாகர்!.
தமிழ் சினிமா இசை வரலாற்றில் சிறப்பான பல பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. அவரது காலகட்டத்தில் ஒரு வருடத்திலேயே ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
ஹாலிவுட் மாதிரியான வெளிநாடுகளில் இருக்கும் பெரும் இசை கலைஞர்கள் கூட இளையராஜாவிற்கு நிகரான அளவில் இத்தனை பாடல்களுக்கு இதுவரை இசையமைத்தது கிடையாது. அந்த அளவிற்கு எக்கச்சக்கமான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இளையராஜாவிற்கு பிறகு இசையில் சில விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர். தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான படங்களுக்கு சிறப்பான இசையை வழங்கி இருக்கிறார். அதில் கில்லி மாதிரியான படங்கள் மிக முக்கியமானவை என்று கூறலாம்.
இந்த நிலையில் இப்படியான இசையை எப்படி அவரால் இசையமைக்க முடிகிறது என கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த வித்யாசாகர் முக்கியமான சில விஷயங்களை கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் இளையராஜாவிற்கு முன்பு வரை இசையில் ஒரு கட்டமைப்பு இருந்தது ராகத்திற்கும் சரணத்திற்கும் இடையே எப்போதும் தொடர்பு இருக்கும்.
அதுதான் பாடல்களுக்கு இடையில் எந்த ஒரு தடங்கலையும் ஏற்படுத்தாமல் அந்த பாடலை கேட்க வைக்கும். ஆனால் இளையராஜாவிற்கு பிறகு அந்த முறை மாறியது. சரணத்திற்கு தொடர்பே இல்லாமல் ராகங்கள் அமைவது என்பதெல்லாம் இருந்தது.
ஆனால் நான் சினிமாவில் தொடர்ந்து எம் எஸ் வி, இளையராஜா போலவே ராகத்திற்கு தகுந்த சரணத்தை கொண்டுதான் இசையமைத்துக் கொண்டு இருந்தேன். அதனால்தான் எனது இசைக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார் வித்யாசாகர்.