Connect with us

மணி சார் படமா இருக்கலாம்… அதுக்காகவெல்லாம் கேப்டனை மிஞ்சிட முடியாது!… படப்பிடிப்பில் கெத்து காட்டிய விஜயகாந்த்!..

Cinema History

மணி சார் படமா இருக்கலாம்… அதுக்காகவெல்லாம் கேப்டனை மிஞ்சிட முடியாது!… படப்பிடிப்பில் கெத்து காட்டிய விஜயகாந்த்!..

Social Media Bar

எவ்வளவோ காலங்கள் ஆன பிறகும் தமிழ் சினிமாவில் மாறாமல் இருக்கிற விஷயம் என்றால் அது ஊழியர்களுக்கு நடுவே இருக்கும் ஏற்ற இறக்க பிரச்சனைகள் தான்.

தமிழ் சினிமாவில் உணவு கூட பெரும் நடிகர்களுக்கு நல்ல உணவும், சின்ன சின்ன ஊழியர்களுக்கு சாதாரண உணவும் கொடுக்கும் பழக்கம் இப்போது வரை தமிழ் சினிமாவில் உண்டு

ஆனால் அதை மாற்றி அமைக்க நினைத்த ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜயகாந்த்தான். விஜயகாந்த் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஊழியர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதைதான் விஜயகாந்த்தும் சாப்பிடுவார் விஜயகாந்திற்கு என்று தனி உணவு வராது.

அவருக்கு ஒரு ஜூஸ் கொடுத்தால் கூட அதை மற்ற ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்கிற நிலை விஜயகாந்த் திரைப்படத்தில் இருக்கும். இதற்காக ஒவ்வொரு படத்திலும் அவரது சம்பளத்திலிருந்து 10 லட்ச ரூபாயை உணவுக்காக கொடுத்துவிடுவார்.

இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அப்பொழுது ஒரு செட்டில் நடந்து கொண்டிருந்தது. அதற்கு பக்கத்து செட்டில் விஜயகாந்த் நடித்த உழவன் மகன் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. உழவன் மகன் திரைப்படம் ஒரு சின்ன பட்ஜெட் திரைப்படம்.

ஆனால் நாயகன் படப்பிடிப்பு நடந்த செட்டில் ஊழியர்களுக்கு தக்காளி சாதமும், புளி சாதமும் உணவாக வழங்கப்பட்டு கொண்டு வந்தது. ஆனால் விஜயகாந்த் நடித்த உழவன் மகன் படத்தின் செட்டில் அனைவருக்கும் கறி சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது. என்னதான் கமல் பெரிய நாயகன் என்றாலும் விஜயகாந்துக்கு இருந்த அந்த பெரிய மனது பெரிய நடிகர்களுக்கு கூட இல்லை என அப்போதே அந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளானது. 

To Top