Tamil Cinema News
அந்த மாதிரி கதை இருக்குறதால நடிகைகள் நடிக்க ஒத்துக்கல.. இயக்குனர் கொடுத்த சர்ச்சை பேட்டி..!
புது புது கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் ஒரு சில திரைப்படங்கள் தான் வெற்றியை பெறுகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழில் வெளியானது. அவற்றில் 18 திரைப்படங்கள்தான் நல்ல வெற்றியை கொடுத்தன. மேலும் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற திரைப்படங்கள் என்று பார்த்தால் 50 திரைப்படங்கள் கூட அதில் இல்லை.
இப்படித்தான் தற்சமயம் தமிழ் சினிமாவின் நிலை இருந்து வருகிறது நிறைய இயக்குனர்கள் நிறைய திரைப்படங்களை இயக்குகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் சில திரைப்படங்கள் மட்டுமே கவனம் ஈர்க்கின்றன.
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் அவற்றின் கதை நன்றாக இருக்கும். பட்சத்தில் அவற்றிற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. போன வருடம் வெளியான லப்பர் பந்து மாதிரியான திரைப்படங்கள் அப்படித்தான் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் எக்ஸ்ட்ரீம் என்கிற ஒரு திரைப்படம் தற்சமயம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா பேசும் பொழுது சில சர்ச்சைக்குரிய விஷயங்களை கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது இந்த திரைப்படத்தை இயக்கும்போது இதில் நடிப்பதற்கு நடிகைகளே கிடைக்கவில்லை. ஏனெனில் நடிகைகள் எல்லாம் அவர்களது ஆடை சுதந்திரத்திற்கு எதிரான திரைப்படம் இது என்று நினைத்தனர். எனவே இந்த படத்திற்கு நடிகைகள் கிடைப்பது சிரமமான விஷயமாக ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார் இயக்குனர்.
