Cinema History
வாலி படத்தில் சிறப்பா வரவேண்டிய சீன்!.. அஜித் ஒப்புக்கொள்ளாததால் வைக்கல!..
சில திரைப்படங்களில் அற்புதமான சில காட்சிகள் வைக்க நினைத்தாலும் கூட சில தடைகளின் காரணமாக அந்த காட்சிகள் வைக்கப்படாமல் போகும். இயக்குனர்கள் பலரே இது குறித்து கூறும் பொழுது திரைப்படத்தை நாங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ 100% அப்படி எந்த ஒரு காட்சியையும் எங்களால் எடுக்க முடிந்தது கிடையாது.
அங்கு ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப படத்தின் காட்சிகள் மாறுபடும் எனவே நாம் எடுக்க நினைத்த காட்சியிலிருந்து 50% சரியாக வந்து விட்டாலே அது வெற்றி தான் என்கிற ரீதியில்தான் படப்பிடிப்பு இருக்கும் என்று கூறியுள்ளனர்.
வாலி திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சி நடிகர் அஜித்தால் நிராகரிக்கப்பட்டது குறித்து அந்த படத்தில் பணி புரிந்த உதவி இயக்குனர் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறும் பொழுது அதில் சிம்ரன் கதாபாத்திரத்திற்கு அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் இருக்கும்.
இதனை அறிந்த சிம்ரனின் கணவனான தம்பி கதாபாத்திரம் அவன் மீசையை எடுத்துவிட்டு வந்து சிம்ரனிடம் அதை காட்டி இனி உனக்கு யார் அண்ணன், யார் தம்பி என்கிற சந்தேகம் வராது. மீசை இல்லாமல் இருந்தால் அதுதான் நான் என்று கூறியிருக்கிறார்.
நேரத்தில் பார்த்தால் அண்ணன் கதாபாத்திரமும் மீசையை எடுத்து விட்டு வருகிறார். இப்படியான ஒரு காட்சி படத்தில் வைக்கப்பட இருந்தது ஆனால் இந்த காட்சிக்கு பிறகு முழுக்க முழுக்க அஜித் மீசை இல்லாமல் நடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும். ஆனால் அஜித் மீசையை எடுப்பதற்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவே இல்லை இதனால் மொத்தமாக அந்த காட்சியை படத்திலிருந்து தூக்கி இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா