Bigg Boss Tamil
குப்பையை கூட கொட்டுறது இல்ல – விக்ரமன் மீது குவியும் குற்றச்சாட்டுகள்
பிக் பாஸ் வீட்டில் நேற்றுதான் யார் யார் எந்த வேலைகளை செய்ய வேண்டும் என்று அனைவரையும் பிரித்து விட்டனர். இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்தின் தலைமை பொறுப்பை ஏ.டி.கே எடுத்துள்ளார்.
அந்த வகையில் பாத்திரம் கழுவும் குழுவில் விக்ரமன் சேர்க்கப்பட்டார். ஆனால் வாரம் துவங்கியது முதலே பாத்திரம் கழுவும் குழு ஒழுங்காக வேலை செய்வதில்லை என குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன.
பல நேரங்களில் பாத்திரங்கள் கழுவாமல் அப்படியே கிடந்தன.
முக்கியமாக அந்த குழுவில் விக்ரமன் சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. நேற்றைய தினம் பாத்திரங்களை கழுவவில்லை என விக்ரமை அழைத்தபோது அவர் சரியாக நடந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்ரமன் ஒழுங்காக வேலை செய்யாதது குறித்து ஏ.டி.கே பேசிய வீடியோ ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
வீடியோவை காண க்ளிக் செய்யவும்.
Continue Reading
Advertisement
You may also like...