Latest News
என் கழுத்துல காம்பஸை எடுத்து வச்சிட்டான்!.. காலேஜ்ல பொண்ணு விஷயத்தில் சிக்கிய மணிகண்டன்…
Actor Manikandan: அடுத்த தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் மணிகண்டன் முக்கியமானவர் என கூறலாம். ஏனெனில் மற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வருவதற்கான தகுதியை கொண்டிருந்தாலும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் சிறந்த நடிகர்கள் தமிழில் கிடைப்பது கடினம் என்று கூறலாம்.
ஆனால் மணிகண்டனை பொருத்தவரை அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவராக இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடி மக்களாக அவர் நடித்திருந்த கதாபாத்திரம்தான் பெரிதாக பேசும் கதாபாத்திரமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கியது. இந்த நிலையில் அவர் அடுத்து நடித்த குட் நைட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல சாதனையை படைத்ததுடன் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. தற்சமயம் லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்து அதுவும் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மணிகண்டன் மிமிக்கிரி ஆர்டிஸ்டாக இருந்தார். கல்லூரிகள் திருமணங்களுக்கு சென்று அங்கு மிமிக்கிரி செய்வதை வேலையாக கொண்டிருந்தார்.
மிரட்ட வந்த இளைஞன்:
அந்த சமயத்தில் ஒரு கல்லூரியில் சூர்யா போல அவர் மெமிக்கரி செய்த பொழுது அதை பார்த்து அசந்து போன ஒரு பெண் அவரை பார்த்துக்கொண்டே இருந்ததாம். பிறகு அவர் பேசி முடித்த பிறகு அவரிடம் வந்த அந்த பெண் கண்ணை மூடி கேட்கும் பொழுது சூர்யா பேசுவது போலவே இருந்தது.
நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை என்று கூறி மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் திடீரென்று தூரத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன் கையில் காம்பஸோடு வந்து அதை மணிகண்டனின் கழுத்தில் வைத்திருக்கிறான்.
வைத்துவிட்டு அழுது கொண்டே அந்த பெண் உன்னிடம் சிரித்து சிரித்து பேசினாலே என்ன பேசினாள் என்று கேட்டிருக்கிறான். இல்லை நான் மிமிக்ரி செய்ததற்கு பாராட்டதான் அந்த பெண் வந்தார் என்று மணிகண்டன் பயந்து கொண்டே கூடியிருக்கிறார் இந்த அனுபவத்தை இவர் பேட்டியில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.