Latest News
இயக்குனர் ஷங்கரே அமைதியாக இருக்கார் உங்களுக்கென்ன?.. தேர்தல் பிரச்சனையில் சிக்கிய தங்கலான் திரைப்படம்!..
Director Shankar: சமீபத்தில் விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவுமே அவருக்கு அவ்வளவாக பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது என்றாலும் அதில் விக்ரம் மட்டுமே கதாநாயகனாக நடிக்கவில்லை.
அது இல்லாமல் தனியாக விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதுவும் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் நடிப்பு ரீதியாக அவர் தன்னுடைய முழுமையான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்து விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான பொழுதே மக்களுக்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது. அந்த அளவிற்கு படமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்த நிலையிலும் இன்னும் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படாதது குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்து வந்தன.
உண்மையை கூறிய பா.ரஞ்சித்:
பா.ரஞ்சித்திற்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை என்றெல்லாம் பேச்சுக்கள் வர துவங்கின. இந்த நிலையில் இது குறித்து பேசிய பா.ரஞ்சித் தற்சமயம் தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கலாம் என்று காத்திருக்கிறோம்.
படத்தின் முழு படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டன தேர்தலுக்குப் பிறகு தணிக்கை குழுவிற்கு அனுப்பி சான்றிதழ் பெற்று படத்தை வெளியிட்டு விடுவோம் எனவே தேவையில்லாத சர்ச்சைகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார் பா.ரஞ்சித்.
தேர்தல் சமயத்தில் படத்தை வெளியிடுவது என்பது கடினமான விஷயமாகும். இதனால்தான் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டையே தேர்தலுக்கு பிறகு வைத்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் பா.ரஞ்சித் படத்தை வெளியிடுவது அவருக்கு ரிஸ்க் என்பதை மிகத் தாமதமாகதான் அறிந்திருக்கிறார். அதனால்தான் அதற்குள்ளாகவே இப்படியான சர்ச்சைகள் மக்கள் மத்தியில் எழ துவங்கி இருக்கின்றன.