Connect with us

எல்லாருக்கும் வண்டி வாங்கி தர போறேன்!.. அஜித்தை தாண்டி மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா

Cinema History

எல்லாருக்கும் வண்டி வாங்கி தர போறேன்!.. அஜித்தை தாண்டி மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா

Social Media Bar

தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா. சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் எஸ்.ஜே சூர்யா.

தமிழ் சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்திலேயே கதாநாயகன் ஆக வேண்டும் என்பதே எஸ்.ஜே சூர்யாவின் ஆசையாக இருந்தது. ஆனால் எடுத்த உடனே கதாநாயகன் ஆக முடியாது என்பதால் முதலில் இயக்குனர் ஆக முடிவு செய்தார்.

அவரது முதல் படமான வாலி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. நடிகர் அஜித்திற்கும் அது முக்கியமான படமாக அமைந்தது. வாலி படம் முதல் படம் என்பதால் அதற்கு குறைவான சம்பளத்தையே பெற்றார் எஸ்.ஜே சூர்யா.

ஆனால் அதற்கு பிறகு விஜய் நடிக்கும் குஷி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யாவிற்கு பெரும் தொகையை முன்பணமாக கொடுத்தனர்.

முதல் முறையாக அப்போதுதான் பெரும் தொகையை சம்பளமாக வாங்கினார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் அந்த தொகையை அப்படியே ஒரு பைக் ஷோருமீல் கொடுத்து தன்னுடன் பணிப்புரிந்த 7 உதவி இயக்குனர்களுக்கும் பைக் வாங்கி கொடுத்தார் எஸ்.ஜே சூர்யா.

அப்போது எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் மாரிமுத்து இந்த தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top