Connect with us

இந்த நெல்சனால அந்த பொண்ணு முன்னாடி மானமே போயிட்டு!.. வெளிப்படையாக கூறிய ரஜினி..

Cinema History

இந்த நெல்சனால அந்த பொண்ணு முன்னாடி மானமே போயிட்டு!.. வெளிப்படையாக கூறிய ரஜினி..

Social Media Bar

தமிழ் திரையுலகில் வசூல் மன்னனாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதிற்கு மேல் ஆகியும் கூட இன்னமும் அவரது திரைப்படம் கோடிகளை குவிப்பது மூலம் சூப்பர் ஸ்டார் என்றால் யார் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த்.

ஆனால் அவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறாமல் இருந்தது. எனவே அடுத்து நல்ல ஹிட் படமாக நடிக்க வேண்டும் என நினைத்தார். எனவே டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்க இருந்தார்.

ஆனால் அவரின் கதை பிடிக்காத காரணத்தால் அடுத்து இயக்குனர் நெல்சனுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் கமிட் ஆனார். ஜெயிலர் திரைப்படம் நெல்சனுக்கு முக்கியமான படமாக இருந்ததால் அவர் படத்தின் அனைத்து காட்சிகளும் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக நடிகர்களை வாட்டி எடுத்துவிட்டார்.

இதுக்குறித்து ரஜினி கூறும்போது பல வருடங்களுக்கு பிறகு நான் ரம்யா கிருஷ்ணனுடன் சேர்ந்து நடிக்கிறேன். ஒரு காட்சியில் என்னை 9 தடவைக்கு மேல் நடிக்க வைத்துவிட்டார் நெல்சன். இவ்வளவு நாள் கழித்து நீலாம்பரிக்கிட்ட படையப்பாவின் மானத்தை போக செய்துவிட்டார் நெல்சன் என கூறியுள்ளார் ரஜினி.

To Top