Connect with us

ரோட்டுல வச்சி என்னை ஒருத்தன் அடிச்சான்!.. தலையில் அடிச்சவன் சோலியை முடிச்சிவிட்ட கீர்த்தி சுரேஷ்!..

keerthy suresh1

Cinema History

ரோட்டுல வச்சி என்னை ஒருத்தன் அடிச்சான்!.. தலையில் அடிச்சவன் சோலியை முடிச்சிவிட்ட கீர்த்தி சுரேஷ்!..

Social Media Bar

தமிழில் பிரபலமாக உள்ள சினிமா நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்தார் என்றாலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம்தான் கீர்த்தி சுரேஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் வரிசையாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து இது அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதில் முக்கியமான திரைப்படம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு அவர் நடித்த நடிகையர் திலகம் என்கிற திரைப்படம்.

இந்த திரைப்படம் மொத்த தென்னிந்தியாவிலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பிற்கு அங்கீகாரத்தை பெற்று தரும் ஒரு திரைப்படமாக அமைந்தது எனது  கூறலாம். தொடர்ந்து தற்சமயம் மாமன்னன் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது சினிமாவிற்கு முன்பு தனது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை கூறியிருந்தார் ஒருமுறை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு நபர் கீர்த்தி சுரேஷிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அதனால் கடுப்பான கீர்த்தி சுரேஷ் அவர் கன்னத்திலேயே அறைந்திருக்கிறார். பிறகு சாலையை கடக்கும் பொழுது அந்த நபர் கீர்த்தி சுரேஷின் பின்னால் வந்து அவரை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் அந்த நபரை தேடி கண்டுபிடித்து அவரை போலீசிடம் பிடித்து கொடுத்துள்ளார்.

அந்த அளவிற்கு மிகவும் கோபமான ஒரு ஆள்தான் கீர்த்தி சுரேஷ் ஆனால் திரைப்படங்களில் பார்க்கும் பொழுது மிகவும் மென்மையான ஒரு கதாபாத்திரமாக அவர் தெரிகிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top