Connect with us

ஜூன் மாசம் வரைக்கும்தான் டைம்!.. ரஜினிக்கு உதவப்போய் அஜித்திடம் சிக்கிய தயாரிப்பு நிறுவனம்!.. அஜித் கொடுத்த கடைசி வார்னிங்!.

ajith

News

ஜூன் மாசம் வரைக்கும்தான் டைம்!.. ரஜினிக்கு உதவப்போய் அஜித்திடம் சிக்கிய தயாரிப்பு நிறுவனம்!.. அஜித் கொடுத்த கடைசி வார்னிங்!.

Social Media Bar

தமிழில் பெரும் படங்களை இயக்க கூடிய நிறுவனமாக லைக்கா நிறுவனம் உள்ளது. லைக்கா நிறுவனம் வெளிநாட்டில் சிம் கார்டு நிறுவனமாக செயல்ப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து பெரிய படங்களாக தயாரித்து வருவதால் தற்சமயம் சிக்கலில் சிக்கியிருக்கிறது லைக்கா நிறுவனம்.

பெரும்பாலும் பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்குவது கொஞ்சம் கடினமான காரியமாகும். ஒரு நாளைக்கான படப்பிடிப்பு செலவுகளுக்கே பல லட்சங்கள் செல்வாகும். இந்த நிலையில் பல பெரிய படங்களை கமிட் செய்தது லைக்கா நிறுவனம்.

அப்படியாக லைக்கா நிறுவனம் இந்தியன் 2, இந்தியன் 3, வேட்டையன், விடாமுயற்சி என கமிட் ஆகி இருக்கும் அனைத்து படங்களும் பெரும் படங்களாக கமிட்டாகி இருக்கிறது. இதனால் சில காலங்களுக்கு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது லைக்கா நிறுவனம்.

ajith-1
ajith-1

ஏனெனில் பொருளாதார சிக்கல் காரணமாக அனைத்து படங்களையும் தயாரிப்பது லைக்கா நிறுவனத்திற்கு கடினமான காரியமாக உள்ளது. எனவே முதலில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பிறகு விடாமுயற்சியை தொடரலாம் என முடிவு செய்தது லைக்கா நிறுவனம்.

ஆனால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்குவதற்காக காத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில் லைக்கா நிறுவனத்திடம் பேசிய அஜித் ஜூன் மாதம் அடுத்த படத்திற்கு நடிக்க போகிறேன். அது முடியும் வரை என்னால் கால் ஷூட் கொடுக்க முடியாது. அதற்கு முன்பே படப்பிடிப்பை முடித்துவிடுங்கள் என கூறிவிட்டாராம்.

இதனை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

To Top