அட்லிக்கு விஜய் என்ன செஞ்சாரோ அதைதான் அஜித் மார்க் ஆண்டனி இயக்குனருக்கு செஞ்சாரு!.. ஒப்பன் டாக் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழில் சில சமயங்களில் சில திரைப்படங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றியை கொடுக்கும். அப்படி தற்சமயம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த படம் மார்க் ஆண்டனி.

திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே அந்த திரைப்படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு எதுவும் இருக்கவில்லை. ஆனால் படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது பலருக்கும் வரவேற்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து படம் வெளியான ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியது. இந்த படம் தற்சமயம் பெரும் வெற்றியை கண்டுள்ளது. கிட்டத்தட்ட 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் குறித்து எஸ் ஜே சூர்யா பேசும்பொழுது ஒரு விஷயத்தை கூறியிருந்தார். சில பெரும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தருவதுண்டு. அப்படி நடந்த விஷயம்தான் இந்த மார்க் ஆண்டனி படமும் கிட்டத்தட்ட ஜவான் திரைப்படத்திலும் இதே விஷயம் நடந்துள்ளது.

ஜவான் திரைப்படத்தின் கதையை முதன் முதலாக விஜய்யிடம் தான் கூறினார் அட்லீ. அந்த கதையை கேட்ட விஜய் இந்த கதை பாலிவுட்டிற்கு நன்றாக செட்டாகும், எனவே இதை ஷாருக்கானிடம் சென்று சொல் என்று அறிவுரை கூறியுள்ளார். அதன்படி அட்லீயும் ஷாருக்கானிடம் கூறியுள்ளார்.

அதேபோல மார்க் ஆண்டனியின் கதையை முதலில் ஆதித் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்திடம்தான் சென்று கூறியுள்ளார். அதைக் கேட்ட அஜித் இந்த கதை விஷாலுக்கு சரியாக இருக்கும் எனவே அவரிடம் இந்த கதையை கூறு என்று விஷாலிடம் அவரை அனுப்பி வைத்துள்ளார். இந்த விஷயத்தை எஸ்.ஜே சூர்யா அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.