Connect with us

வடசென்னை மொத்தம் மூன்று பாகம்!.. என்னை வச்சி ஒரு படம் இருக்கு!.. சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் அமீர்!.

vetrimaaran ameer

Latest News

வடசென்னை மொத்தம் மூன்று பாகம்!.. என்னை வச்சி ஒரு படம் இருக்கு!.. சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் அமீர்!.

Social Media Bar

Ameer in Vada chennai: தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வந்த மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர் சுல்தான். தொடர்ந்து தமிழில் சில படங்களை இவர் இயக்கியுள்ளார். அதில் பருத்திவீரன், ஆதி பகவான் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அதற்கு பிறகு படங்களில் அதிகமாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அமீர். தற்சமயம் மாயவலை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் ராஜன் என்னும் கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கிறார்.

ஆனால் ஏற்கனவே வட சென்னை படத்திலும் அவரது பெயர் ராஜன் தான். அப்படியிருக்கும்போது இந்த படத்திலும் அதே பெயரில் ஏன் நடிக்கிறார் என கேட்கும்போது அந்த ராஜன் ஒருவேளை மனம் திருந்தி வேறு வேலைக்கு சென்றிருந்தால் எப்படி இருக்கும் என்பதாக இந்த கதை இருப்பதாக அமீர் கூறினார்.

ஆனால் அமீருக்காக தனி படம் செய்யலாம் என வெற்றிமாறன் முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது. இதுக்குறித்து அமீர் கூறும்போது ஆமாம் என்னை வைத்து ராஜன் வகையறா என்கிற படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். ஏற்கனவே அந்த படத்தின் பாதி வேலைகள் முடிந்துவிட்டன.

ஆனால் அந்த படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு பதிலாக ஓ.டி.டியில் வெளியிடலாம் என முடிவு செய்தார் வெற்றிமாறன். ஆனால் இந்த படம் இன்னும் முடிவடையவில்லை என கூறியுள்ளார் அமீர்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top