Tamil Cinema News
ஒரே நேரத்தில் இத்தனை ஆண்களோடு எப்படி செய்ய முடியும்.. அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா..!
ஒரு காலகட்டத்தில் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. அனுஷ்கா நடித்த அருந்ததி திரைப்படம் தான் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து தமிழில் சூர்யா விஜய் என்று பிரபலமான நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்தார் அனுஷ்கா. ஒரு கட்டத்திற்கு மேல் அனுஷ்காவிற்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது.
தொடர்ந்து அவரது உடல் எடை அதிகரித்தது அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இஞ்சி இடுப்பழகி என்கிற ஒரு திரைப்படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை மிகவும் அதிகரித்தார். அதனை தொடர்ந்து அந்த படத்திற்கு பிறகு அவருக்கு உடல் எடையை குறைப்பது என்பது கடினமான காரியமாக மாறியது.
எனவே அவருக்கு வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. அவர் கமிட்டான நிறைய திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது இருந்தாலும் பாகுபலி திரைப்படம் அவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது.
அதற்கு பிறகு இப்பொழுதும் சினிமாவில் நடித்து வரும் அனுஷ்கா ஒரு பேட்டியில் அவரை குறித்த கிசு கிசுக்கள் குறித்து பதில் அளித்திருக்கிறார். அதில் அனுஷ்கா கூறும் பொழுது நான் எந்த ஒரு நடிகரோடு நடிக்கும் பொழுதும் என்னை குறித்து ஒரு காதல் கதையை உருவாக்கி விடுகிறார்கள்.
எந்த ஒரு நடிகரோடும் நட்பாக கூட பழக முடியவில்லை உதாரணத்திற்கு நடிகர் பிரபாஸுடன் ஆரம்ப காலங்களில் நான் நடித்த போது அவரை நான் காதலிக்கிறேன் என்று கூறி வந்தனர்.
பாகுபலி திரைப்படத்தில் நடித்த பொழுது நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பேசி வந்தனர். அதே சமயம் வேறு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தின் நாயகன் உடன் நான் காதலில் இருந்து வருவதாக கூறுகின்றனர். அது எப்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் காதலில் இருக்க முடியும் என்று பேசியிருக்கிறார் அனுஷ்கா.
