Cinema History
என்ன அந்த பாட்டு சரியில்ல.. ரகுமான் பாட்டை திருத்திய வாலி.. ஆனா செம ஹிட்டு!..
தமிழில் உள்ள பெரும் பாடலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் பாடலாசிரியர் வாலி. கவிஞர் கண்ணதாசனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் கவிஞர் வாலிதான். எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டங்களில் துவங்கி விஜய் அஜித் காலகட்டம் வரை கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு வரிகள் எழுதுவதை வேலையாக வைத்திருந்தார் வாலி.
நான் ஆணையிட்டால் பாடலில் துவங்கி மங்காத்தா வரை பல ஹிட் பாடல்களுக்கு, பாடல் வரிகளை எழுதியவர் வாலி. அதனால் மற்ற பாடல் ஆசிரியர்களை விடவும் அதிகமான அனுபவங்களை கொண்டவர் வாலி.
சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு கமல் நடித்த வெளியான திரைப்படம் இந்தியன். மாஸ் ஹிட் கொடுத்த அந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தன.
படத்தில் உள்ள அனைத்து பாடல்களுக்குமே வாலிதான் பாடல் எழுதினார். அதில் ஒரு பாடலுக்கு மட்டும் இசையை வாலி மாற்றி அமைத்தார். பொதுவாக பாடலாசிரியர் பேச்சைக் கேட்டு இசையமைப்பாளர்கள் பாட்டை மாற்றி அமைக்க மாட்டார்கள். ஆனால் வாலிக்கு இருந்த மரியாதை காரணமாக இந்த விஷயம் நடந்துள்ளது.
அக்கடான்னு நாங்க நட போட்டா என்கிற பாடல் முதலில் இசை அமைக்கப்பட்ட பொழுது மிகவும் சுமாரான ஒரு இசையாக அமைக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்ட வாலி இந்த பாடல் சுமாராக இருக்கிறது என ஏ.ஆர் ரகுமானிடம் கூறி பாடலை மாற்ற வேண்டும் எனவும் கூறி அவர் மொத்தமாக பாட்டின் மெட்டை மாற்றி அமைத்து அதன் பிறகு அதற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். அந்த பாடலும் பெரும் ஹிட் கொடுத்த பாடலாகியுள்ளது.