Cinema History
பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சிவாஜி போட்ட ப்ளான்… ஷாக்கான கமல் ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா.!
திரையரங்குகளில் இரண்டு பாகங்களாக வந்து பெரும் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதி நாவலாக வெளியாகி அப்போதே அதிகமாக விற்று இப்பொழுது படமாகவும் பெரும் ஹிட் கொடுத்துள்ளது பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வனின் சிறப்பம்சமே இத்தனை வருட சினிமா துறையில் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க ஆசைப்பட்டனர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக்குவதில் உள்ள பெரும் பிரச்சனை அதில் பெரும் நடிகர்களை வைத்து படமாக்க வேண்டும் மொத்தமாக இவ்வளவு பெரிய கதையை படமாக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.
ஆனால் யாரும் அதை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடவில்லை. எம்.ஜி.ஆர் அவர் வந்தியத்தேவனாக நடித்து இந்த படத்தை எடுக்க ஆசைப்பட்டார். அதற்குப் பிறகு சிவாஜி பொன்னியின் செல்வன் குறித்து ஒரு பிளான் வைத்திருந்தார்.
அதைக் குறித்து அந்த காலகட்டங்களிலேயே கமலிடம் பேசியுள்ளார். அப்போது கமல் பிரபலமான ஒரு நடிகராக இருந்தார். அவரிடம் பேசிய சிவாஜி பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாகலாம் ,அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை ரஜினிக்கு கொடுக்கலாம். என கூறியுள்ளார்.
ஆனால் வந்தியத்தேவன் மாதிரியான கதாபாத்திரத்திற்கு கமல்தான் அப்போது நன்றாக ஒத்துப் போகக் கூடிய ஆள் அதுவும் இல்லாமல் கமல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். எனவே அவர் ஐயா நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என சிவாஜியிடம் கூறினார்.
அதற்கு சிவாஜி நீ ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என அப்பொழுதே பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ஒரு மாஸ் பிளான் போட்டுள்ளார் சிவாஜி கணேசன். அது திரைப்படமாகவில்லை ஒரு வேலை அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆகியிருந்தால் இப்போதை விட பெரிய ஹிட் கொடுத்திருக்கலாம்.