aranmanai 4

அரண்மனை 4 திரைப்படம்!.. ஐந்து நாள் வசூல் நிலவரம்!..

News Tamil Cinema News

சுந்தர் சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து வரும் திரைப்படம் அரண்மனை. பொதுவாக பேய் படங்கள் என்றாலே தமிழில் இறந்துப்போன பேய்கள் தன்னை கொன்றவனை பழி வாங்குவதற்காக வருவதாக இருக்கும்.

முனி மாதிரியான திரைப்படங்களில் கூட அப்படியான கதைதான் இருக்கும். ஆனால் அரண்மனை திரைப்படத்தை பொறுத்தவரை அதன் கதையில் மாற்றம் இருக்கும். இறந்த ஆன்மா அதற்கு காரணமானவர்களை கொலை செய்ய வரும்.

thammanna aranmanai 4
thammanna aranmanai 4

ஆனால் கதாநாயகன் அவர்களை ஆன்மாவிடம் இருந்து காப்பாற்ற முயற்சி செய்வார். இந்த நிலையில் தற்சமயம் சுந்தர் சி நடித்து இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

வெளியான ஐந்து நாட்களில் இதுவரை 33 கோடி வசூல் செய்துள்ளது அரண்மனை 4 திரைப்படம். இந்த வார இறுதிக்குள் 50 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.