Connect with us

என்னையா டைம்க்கு வரமாட்டாரா!.. நா.முத்துக்குமார் வராததால் இயக்குனர் ஹரி செய்த காரியம்!.. ஆனாலும் விபரீதம்தான்!..

director hari thamirabharani

Latest News

என்னையா டைம்க்கு வரமாட்டாரா!.. நா.முத்துக்குமார் வராததால் இயக்குனர் ஹரி செய்த காரியம்!.. ஆனாலும் விபரீதம்தான்!..

Social Media Bar

தமிழில் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய திரைப்படங்களுக்கெல்லாம் அப்போது நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

ஆனால் இப்போது ஹரி இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக பெரிதாக வெற்றியடைவதில்லை. ஏனெனில் முன்பெல்லாம் அதிகப்பட்சம் குடும்ப கதையாக இருந்த திரைப்படங்கள் இப்போது முழுக்க முழுக்க சண்டை படங்களாகவே மாறிவிட்டது.

இதனாலேயே அவரது திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் என்பது குறைந்துவிட்டன. இந்த நிலையில் தாமிரபரணி திரைப்படமானது ஹரி இயக்கத்தில் வெற்றியை கொடுத்த முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே நல்ல வெற்றியை கொடுத்தன.

நா.முத்துக்குமார்தான் அந்த பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதி வந்தார். அனைத்து பாடல்களும் முடித்த நிலையில் ஒரு பாட்டுக்கு மட்டும் பாடல் வரிகள் எழுத வேண்டி இருந்தது. அதற்கு பாடல் வரிகள் எழுதுவதற்கு நா.முத்துக்குமார் வராத காரணத்தால் ஹரியே அதற்கு பாடல் வரிகளை எழுதினார்.

அது தாலியே தேவையில்ல என்கிற அந்த பாடலுக்கான வரிகளைதான் ஹரி எழுதினார். அவர் எழுதியும் கூட அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்ற பாடலாகவே அமைந்தது. ஒரு பக்கம் ஹரி இப்படி பாடல் வரிகளை எழுதுபவராகவும் இருந்துள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top