Cinema History
கமல்ஹாசன் அட்வைஸால் தமிழ் சினிமாவில் வளர்ந்த நாயகர்கள்!.. மேடையில் கூறிய உலகநாயகன்!.
தமிழ் சினிமாவில் நிறைய புது விதமான விஷயங்களை செய்தவர் நடிகர் கமலஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்குதல். பாடல்களை பாடுதல் என்று பல துறைகளிலும் பணிபுரிந்தவர் கமல்ஹாசன்.
அதேபோல உலக திரைப்படம் சார்ந்து அதிக ஞானம் உடையவர். அதனால்தான் தமிழில் ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்களை எல்லாம் கமல்ஹாசன் இயக்கினார். அப்படியான திரைப்படங்களை கமல்ஹாசனை தவிர வேறு யாரும் தமிழில் இயக்கியது இல்லை என்பது முக்கியமான விஷயமாகும்.
இந்த நிலையில் சிறுவயதில் திரைத்துறைக்கு வரும் பலருக்கும் ஊக்கம் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கிறார் கமல்ஹாசன். இதை அவரே ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியுள்ளார். பிரபுதேவா முதன்முதலாக சினிமாவிற்கு வந்த பொழுது அவரது திறமையை கண்டு லண்டனில் இருக்கும் நடன பயிற்சி பள்ளியில் சென்று படித்துவிட்டு வா அது உனக்கு உதவியாக இருக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார் கமல்ஹாசன்.
அதேபோல ஜெயம் ரவியை பஞ்சதந்திரம் படத்தின் படப்பிடிப்பின் போது சந்தித்துள்ளார். அப்பொழுது ஜெயம் ரவி சிறுவனாக இருந்துள்ளார். அவரிடம் வெளியில் சென்று நடிப்புக்காக படிக்க சொல்லியுள்ளார் இருவருமே பிறகு திரைத்துறையில் பெரும் நட்சத்திரமாகிவிட்டனர் இந்த விஷயத்தை கமல்ஹாசன் பகிர்ந்து இருந்தார்.