Tamil Cinema News
கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபலம்..!
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் மிக பிரபலமானவர். இவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெறும் படங்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் பாலா.
சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாதான் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து சூர்யா அந்த படத்தில் இருந்து விலகி கங்குவா திரைப்படத்தில் நடிப்பதற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் பாலா நடிகர் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து அந்த திரைப்படத்தை உருவாக்க துவங்கினார்.
பாலாவின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை அது கொஞ்சம் சோகம் நிறைந்ததாகவே இருந்துள்ளது. பாலா முத்துமலர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வெகு வருடங்களாக இருவரும் ஒன்றாகதான் வாழ்ந்து வந்தனர். ஆனால் திடீரென இருவரும் பிரிவதற்கு முடிவு செய்தனர். அதனால் விவாகரத்து வாங்கினர். இது பலருக்குமே ஆச்சரியத்தை அளித்தது.
எதற்காக இந்த விவாகரத்து நடந்தது என பார்க்கும்போது பாலா மனைவிக்கு வேறொரு மனைவியுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை காயத்ரி தேவியும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.