Latest News
இன்னும் படப்பிடிப்பு முடியலை சார்!.. லோகேஷை காண்டேத்தி வரும் இயக்குனர் !.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!..
Director Gnanavel: ஜெய் பீம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டிருந்தப்போதே இந்த படத்திற்கான திரைக்கதை வேலைகளை அவர் துவங்கிவிட்டார்.
ஏற்கனவே ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்குவதற்கே வெகு நாட்களை எடுத்துக்கொண்டார் இயக்குனர் நெல்சன். இதனால் பலரும் நெல்சனை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நெல்சனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இயக்குனர் ஞானவேலின் செயல்கள் இருக்கின்றன.
வேட்டையன் திரைப்படத்தை பொறுத்தவரை போலி என்கவுண்டர்களுக்கு எதிரான ஒரு திரைப்படம் இது என பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகின்றன. விஜயகாந்த் சத்யராஜ் கதாநாயகனாக இருந்த காலக்கட்டத்தில் எல்லாம் 8 மாதத்தில் 3 படங்களை தயாரித்து விடுவார்கள்.
காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்:
ஆனால் இன்னமும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என கூறப்படுகிறது. பிப்ரவரி மாதத்தோடு வேட்டையன் திரைப்படம் படப்பிடிப்பு முடிய இருக்கிறது என தகவல் வந்ததால் அடுத்து இயக்கவிருந்த கைதி 2 திரைப்படத்தை தள்ளி போட்டுவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
லியோ படத்தை தொடர்ந்து அடுத்து ரஜினி படத்தை இயக்குவதற்காக அவர் காத்துக்கொண்டுள்ளார். மார்ச்சில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்தது. ஆனால் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் 50 நாட்களுக்கு செல்லும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மே மாதத்திற்கு பிறகுதான் லோகேஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பே துவங்கும் என கூறப்படுகிறது. இது தெரிந்திருந்தால் இந்த இடைவெளியில் கைதி படத்தின் படப்பிடிப்பையே முடித்திருக்கலாமே என கடுப்பில் இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை குறைந்த நாட்களிலேயே அவர் படப்பிடிப்பை முடித்துவிடுவார். லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பையே வெகு சீக்கிரமாக முடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.