Connect with us

எனக்கு ஏதாச்சும் ஆயிடுமோன்னு விஜய் பயந்துக்கிட்டே இருந்தாரு.. நெல்சன் வெளியிட்ட சீக்ரெட்!..

Cinema History

எனக்கு ஏதாச்சும் ஆயிடுமோன்னு விஜய் பயந்துக்கிட்டே இருந்தாரு.. நெல்சன் வெளியிட்ட சீக்ரெட்!..

cinepettai.com cinepettai.com

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் நெல்சன் இருக்கிறார். முன்னை போல் இல்லாமல் இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு படங்கள் ஹிட் கொடுத்தாலே பெரும் நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகளை பெற்று விடுகின்றனர் நடிகர்கள்.

நெல்சனும் அப்படியான சிறந்த வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவர் இயக்கிய முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா திரைப்படமானது பெரும் வெற்றியை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தையே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கினார் நெல்சன்.

டாக்டர் திரைப்படமும் நல்ல வெற்றியை தந்தது. அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன். ஆனால் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் சில நாட்கள் மன உளைச்சலில் இருந்துள்ளார் நெல்சன். இந்த விஷயத்தை அறிந்த விஜய் அவரை அழைத்து அடிக்கடி பேசியுள்ளார்.

நெல்சன் மனநிலை சரியில்லை என அறிந்து அடிக்கடி ஆறுதல் கூறியுள்ளார். இதுக்குறித்து நெல்சன் கூறும்போது விஜய் 30 வருட சினிமா அனுபவத்தை கொண்டவர். அவருடைய பல திரைப்படங்களுக்கு இந்த மாதிரியான விமர்சனங்களை பார்த்தவர். எனவே இவற்றையெல்லாம் அவர் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் எனக்கு அது வெகுவாக பாதித்தது.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான் நான் அதைவிட்டு வெளியே வந்தேன் என கூறியுள்ளார் நெல்சன்.

POPULAR POSTS

lion king mufasa
vijay dhamu
malavika mohanan
ram charan rajinikanth
ns krishnan mr radha
vishal bailwan ranganathan
To Top