Cinema History
நான் சொன்ன கதையை காபி அடிச்சிதான் தனி ஒருவன் எடுத்தாங்க!..வெளிப்படையாக கூறிய இயக்குனர்..
சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திரைப்படம் அவர்களது துறையிலேயே சிறந்த திரைப்படமாக இருக்கும். அந்த திரைப்படமே இவர்களின் சினிமா வாழ்க்கையை மேலும் ஒருப்படி உயிர்த்தியிருக்கும்.
அப்படியாக நடிகர் ஜெயம் ரவிக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம்தான் தனி ஒருவன். தனி ஒருவன் திரைப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாதான் இயக்கினார். பொதுவாக திரைப்படங்களில் வில்லன் தான் கதாநாயகனை தேடி வருவார்.
ஆனால் இந்த படத்தில் தனக்கான எதிரியை கதாநாயகனே கண்டுப்பிடிப்பார். அந்த கதையமைப்புதான் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது. மேலும் நடிகர் அரவிந்த் சாமிக்கும் ஒரு கம் பேக்காக இந்த திரைப்படம் இருந்தது.
இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் இயக்குனர் ப்ரவீன் காந்தி ஒரு பேட்டியில் சர்ச்சையான விஷயத்தை கூறியிருந்தார். அவர் ஜெயம் ரவியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தாராம். அந்த படத்தின் கதைப்படி போலீஸ் ட்ரைனிங்கில் இருக்கும்போதே ஹீரோ அவரது நண்பர்களை சேர்த்துக்கொண்டு குற்றங்களை கண்டறிகிறார்.
இந்த கதையை அவர் ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாரிடமும் கூறியிருந்தார். அந்த கதையை கொண்டே மோகன் ராஜா இந்த படத்தை இயக்கியதாக ப்ரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.