News
அன்பே சிவம் 2 எப்ப வரும்… அப்டேட் கொடுத்த இயக்குனர் சுந்தர் சி..!
காமெடி இயக்குனராக இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் சீரியஸான திரைப்படங்களையும் முயற்சி செய்தவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த இவர் முறைமாமன் என்கிற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அவர் இயக்கிய முதல் படமே காமெடி திரைப்படமாக இருந்ததால் தொடர்ந்து காமெடி படங்களாகவே நடித்து வந்தார் சுந்தர் சி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இயக்கிய மத கஜ ராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது சுந்தர் சிக்கு அதிக மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
இதுக்குறித்து அவர் பேட்டியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது என் படங்கள் எல்லாம் பெரும்பாலும் எல்லா காலங்களிலும் மக்கள் ரசிக்கும்படியாகதான் இருக்கும். எனது முதல் படமான முறைமாமன் திரைப்படத்தையே மக்கள் இன்னமும் ரசித்து பார்ப்பதை பார்க்க முடிகிறது.
அதே போல 12 வருடங்கள் ஆனாலும் கூட இப்போது வந்த படமாகவே அவர்கள் மத கஜ ராஜாவை பார்க்கின்றனர். என கூறியிருந்தார் சுந்தர் சி. அப்போது அவரிடம் படத்தில் இடம் பெற்றுள்ள கவர்ச்சி காட்சிகள் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுந்தர் சி படத்தில் கவர்ச்சி காட்சிகள் இருக்கலாம். ஆனால் முகம் சுளிக்கும் விதத்தில் இருக்க கூடாது. அப்படி காட்சிகள் வைப்பதால்தான் எனது திரைப்படங்கள் குடும்பங்கள் பார்க்கும் படமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் அன்பே சிவம் படத்தின் இரண்டாம் பாகம் அல்லது அது மாதிரி ஏதாவது படம் இயக்குவீர்களா? என பத்திரிக்கையாளர்கள் கேட்டப்போது சுந்தர் சி கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டார். எனவே இனி அந்த மாதிரியான படங்களை சுந்தர் சியிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என கூறப்படுகிறது.