Connect with us

அது ஒரிஜினல் இல்ல சார் டூப்பு!.. படத்தில் நடித்த நடிகையை கலாய்த்த சுந்தர் சி!..

kiran sundar c

Cinema History

அது ஒரிஜினல் இல்ல சார் டூப்பு!.. படத்தில் நடித்த நடிகையை கலாய்த்த சுந்தர் சி!..

cinepettai.com cinepettai.com

முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஆரம்பத்தில் சுந்தர் சி காமெடி திரைப்படம் இயக்கியதாலோ என்னவோ பிறகு தொடர்ந்து அவருக்கு காமெடி படங்களை இயக்கதான் வாய்ப்பு வந்தது.

அப்படி அவர் இயக்கிய படங்களும் வெற்றியை கொடுத்தது. அரண்மனை, அன்பே சிவம், அருணாச்சலம் போன்ற சில திரைப்படங்கள் அவரது திரைப்படங்களில் காமெடியில் இருந்து மாறுப்பட்ட திரைப்படங்களாகும். அப்படியிருந்தும் கூட அவற்றிலும் காமெடிக்கு எந்த பஞ்சமும் இருக்காது.

இந்த நிலையில் வின்னர் படத்தில் இதுவரை யாருக்குமே தெரியாத ரகசியம் ஒன்றை பகிர்ந்திருந்தார் சுந்தர் சி. வின்னர் திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக கிரண் நடிக்கவில்லை. முதலில் வேறு ஒருவர்தான் படத்தின் கதாநாயகியாக இருந்தார்.

அவர் பாதி படத்திலேயே படத்தில் இருந்து விலகி விட்டார். இருந்தாலும் படத்தில் வரும் மத்தாப்பு சேலைக்காரி என்கிற பாடலில் அவர் சில காட்சிகளில் வருவார். அப்போது ஜெமினி படம் வெளியாகி இருந்ததால் கிரண் பிரபலமாக இருந்தார்.

எனவே பிறகு கிரணை கதாநாயகியாக நடிக்க வைத்தோம். நீங்கள் நினைத்த நீலவேணி கதாபாத்திரம் அந்த முதலில் நடித்த பெண் தான். அப்புறம் நடித்தது வேற வேணி இது டூப்பு வேணி என கலாய்த்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி.

To Top