Connect with us

என்ன சார் படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு ஜெயில்ல தள்ளிட்டீங்க!.. விவேக்கை ஏமாற்றி இயக்குனர் செய்த வேலை!.

vivek

Cinema History

என்ன சார் படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு ஜெயில்ல தள்ளிட்டீங்க!.. விவேக்கை ஏமாற்றி இயக்குனர் செய்த வேலை!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விவேக். வெறும் நகைச்சுவை செய்வது என்பதை தாண்டி அவர் அந்த நகைச்சுவையின் வழியாகவே சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல கூடியவராக இருந்தார்.

இந்த நிலையில் அப்போதெல்லாம் இயக்குனர் வி.சேகரின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதிகப்பட்சம் வி.சேகர் திரைப்படங்கள் என்றாலே அதில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பார்கள்.

vivek
vivek

வரவு எட்டனா செலவு பத்தனா, காலம் மாறி போச்சு போன்ற பல திரைப்படங்களில் அதை பார்க்க முடியும். இந்த நிலையில் நடிகர் விவேக்கும் கூட அவரது திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதல் முறை அவரது திரைப்படத்தில் நடிக்கும்போது சிக்கலில் மாட்டிக்கொண்டார் விவேக்.

விவேக்கிற்கு நடந்த சம்பவம்:

வி.சேகர் திரைப்படத்தில் நடித்த கவுண்டமணி, வடிவேலு இருவருக்குமே அது அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்ததால் அவரது இயக்கத்தில் நடிப்பதற்கு விவேக்கும் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் பொங்கலோ பொங்கல் திரைப்படத்தில் விவேக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மொத்தம் 60 நாட்கள் விவேக் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வி.சேகரை பொறுத்தவரை அவர் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அனைத்து நடிகர்களையும் ஏ.வி.எம் ஸ்டுடியோவிலேயே தங்க வைத்து விடுவார்.

படப்பிடிப்பு முடிந்த பிறகுதான அவர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைப்பார். இந்த விஷயத்தை அறியாமல் படத்தில் கமிட் ஆன விவேக்கிற்கு பிறகுதான் விஷயம் புரிந்தது. உடனே இயக்குனரை அழைத்த அவர் என்ன சார் இப்படி ஜெயில்ல தள்ளிட்டீங்களே என புலம்பியுள்ளார்.

இப்படி அனைவரையும் இங்கேயே தங்க வைத்தால்தான் படப்பிடிப்புக்கு சரியாக வருகிறார்கள் என கூறியுள்ளார் வி.சேகர். ஆனால் அதன் பிறகு வெளியான பொங்கலோ பொங்கல் திரைப்படம் விவேக்கிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

To Top