படம் தூள்.. பிரதீப் ரங்கநாதனின் ட்ராகன் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்!.

தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார் ஆரம்பத்தில் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் இயக்குனராக தான் அறிமுகமானார்.

தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய திரைப்படம் லவ் டுடே.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதனே நடித்தார் அவருடைய நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது. மேலும் அந்த திரைப்படம் பெரிய வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதை காட்டிலும் அதில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் தற்சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Social Media Bar

மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டிராகன் என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ட்ராகன் திரைப்படம் இந்த பிப்ரவரி 21 அன்று  திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத் இந்த திரைப்படம் சிறப்பாக இருப்பதாக கூறி இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து காதல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஏனெனில் அவர் காதல் கதையை பின்புறமாக கொண்டு அவர் நடித்த லவ் டுடே திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்ததால் மற்ற படங்களும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் பிரதீப் ரங்கநாதன்.