Tamil Cinema News
மாரி 2 படத்தின் கதைதான் குட் பேட் அக்லி.. வெளியான கதை..!
நடிகர் அஜித் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்சமயம் வந்த விடாமுயற்சி திரைப்படம்.
பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் என்றாலே அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலான காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் நடிகர்கள் கவனமாக இருப்பார்கள். வேட்டையன் மாதிரியான கதைக்கரு கொண்ட திரைப்படங்களில் கூட ஆக்ஷன் காட்சிகள் வைப்பதற்கு இதுதான் காரணம்.
அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும். ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொறுத்தவரை அந்த படத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விஷயங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல் போனது.
இதனால் தற்சமயம் ரசிகர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தைதான் அதிகமாக நம்பியுள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரே அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஆரம்பத்தில் பெரித தாதாவாக இருக்கும் அஜித் நிறைய ரவுடி வேலைகளை செய்து வருகிறார். அதற்கு பிறகு மனம் திருந்தி குடும்பம் பிள்ளை என வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பழைய எதிரிகள் மூலமாக அவருக்கு பிரச்சனை வருகிறது. அதை அஜித் எப்படி தடுக்க போகிறார் என்பதே கதை என ஒரு தகவல் பரவி வருகிறது
