Tamil Cinema News
விஜய் விரும்பாட்டியும் அதை பண்ணனும்.. இளைஞர்களை கெடுக்க கூடாது… ஜேம்ஸ் வசந்தன்.!
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தும் முக்கியமானவர். பெரும்பாலும் ஜேம்ஸ் வசந்தன் அவர் மனதிற்கு தோன்றிய விஷயங்களை கூறி விடுவார் என்றாலும் கூட அது சில சமயங்களில் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகிறது.
அந்த வகையில் அவர் விஜய் குறித்து பேசிய ஒரு விஷயமும் சர்ச்சையானது விஜய் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு வரும்பொழுது மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.
தலைமுடியை கூட ஒழுங்காக சீவாமல் வந்திருந்தார். விஜய் அதிக பணம் சம்பாதிக்கும் ஒருவராக இருக்கிறார் பெரும்பாலும் அதிக பணம் சம்பாதிப்பவர்கள் எளிமையாக இருப்பது உண்மைதான். ஆனால் அவரைப் பார்த்து வளரும் இளைஞர்கள் எல்லாவற்றையும் அவரை பார்த்து கற்றுக் கொள்கிறார்கள்.
அதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் இப்பொழுது இவர் ஒரு பெரிய மேடை நிகழ்ச்சிக்கு ஒழுங்காக தலையைக்கூட சீவாமல் வருகிறார் என்றால் அதை பார்க்கும் இளைஞர்களும் அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது விஜய் அண்ணாவை அப்படி செய்கிறார் என்றால் நம்மளும் அப்படியே செல்வோம் என்று சொல்வார்கள்.
எனவே பிடிக்கிறதோ இல்லையோ விஜய்க்கு ஒரு பொறுப்பு இருக்கிறது அதை அவர் கடைபிடித்துதான் ஆக வேண்டும் என்று கூறி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
