News
கமல்ஹாசனே அழைத்தும் வாய்ப்பை மறுத்த ப்ரேமலு இயக்குனர்!.. தமிழில் வருவதற்கு ஆசை இல்லை போல!..
சமீபத்தில் மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ப்ரேமலு. தமிழிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் கிரிஸ்.
இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ப்ரேமலு 2 ஆம் பாகத்திற்கு பிறகு ஐ அம் லவ்வர் என்கிற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் கிரிஸ். ஏற்கனவே பிரேமலு 2 ஆம் பாகத்தின் கதை வேலைகள் முடிந்துவிட்டன.

இந்த நிலையில் ஐ அம் லவ்வர் படத்தின் கதை வேலையில் இறங்கியுள்ளார் கிரிஸ். தற்சமயம் திரைப்படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பில் இந்த திரைப்படத்தை தயாரிக்கும்படி இயக்குனரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் ஏற்கனவே பிரேமலு தயாரிப்பாளர்தான் இந்த படத்தை தயாரிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறாராம் இயக்குனர் கிரிஸ். இதனையடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு ஆர்வம் இல்லையா என்றெல்லாம் பேச்சுக்கள் உள்ளன.
ஆனால் எதிர்காலத்தில் இவர் தமிழ் சினிமாவில் திரைப்படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
