Connect with us

அந்த விஷயத்தை எப்புடியா கண்டுப்பிடிச்ச!.. கமலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.எஸ் பாஸ்கர்…

Cinema History

அந்த விஷயத்தை எப்புடியா கண்டுப்பிடிச்ச!.. கமலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.எஸ் பாஸ்கர்…

Social Media Bar

தமிழில் பல நடிகர்கள் சிறப்பான நடிப்புகளை வெளிப்படுத்தியப்போதும் அவர்களுக்கு என்று பெரிதாக அங்கீகாரம் கிடைத்ததே இல்லை. நடிகர் சார்லி, நாசர் என அந்த வரிசையில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர்.

எம்.எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் எங்கள் அண்ணா படத்தில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள்தான் அவரை ஓரளவு பிரபலப்படுத்தின. ஒரு நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி சிறப்பான நடிகர் என்பதை இவர் எட்டு தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்து நிருபித்துள்ளார்.

கமல்ஹாசனோடு ஒருமுறை இவர் பேசிக்கொண்டிருக்கும்போது தேவர் மகன் படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எம்.எஸ் பாஸ்கர் ஒரு எச்சை முழுங்கி ஒரு பெண் வாழ்க்கையை முடிச்சிட்டிங்களே அண்ணே என கூறியுள்ளார்.

என்ன என புரியாமல் கமல் பார்க்க விளக்கம் கொடுத்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். தேவர் மகன் திரைப்படத்தில் ரேவதியின் திருமணம் தடைப்பட்டுவிடும். அப்போது கமல் சிறிது நேரம் யோசித்துவிட்டு எச்சிலை விழுங்கிவிட்டு என்ன கட்டிக்கிறியா என கேட்பார். அந்த எச்சிலை விழுங்கியதோடு தன்னுடைய பழைய காதலையும் விழுங்கிவிட்டார் என கூறியுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த கமல்ஹாசன் என்னய்யா இந்த அளவுக்கு படம் பார்ப்பியா. இந்த சீன்லாம் உனக்கு புரியுமா? என கேட்டுள்ளார். இந்த நிகழ்வை எம்.எஸ் பாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top