Connect with us

நீங்க சொல்ற மாதிரி க்ளைமேக்ஸ் வைச்சா படம் ஓடாது!.. கமலோடு சண்டை போட்ட கே.எஸ் ரவிக்குமார்!.

Ks ravikumar kamalhaasan

Cinema History

நீங்க சொல்ற மாதிரி க்ளைமேக்ஸ் வைச்சா படம் ஓடாது!.. கமலோடு சண்டை போட்ட கே.எஸ் ரவிக்குமார்!.

Social Media Bar

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரும், கமல்ஹாசனும் வெகு காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். கே.எஸ் ரவிக்குமார் கமல்ஹாசனை வைத்து இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் பெரிய ஹிட் கொடுத்துள்ளன.

அவற்றில் பஞ்ச தந்திரம், தசாவதாரம், அவ்வை சண்முகி போன்ற படங்கள் முக்கியமானவை. அதே போல கே.எஸ் ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களில் கமல்ஹாசனின் பங்கும் இருக்கும் என்றும் ஒரு பேச்சு உண்டு. உதாரணமாக அவ்வை சண்முகியின் ஆங்கில படத்தை கே.எஸ் ரவிக்குமாருக்கு போட்டு காட்டி அதை தமிழில் படமாக்குவோம் என ஐடியா கொடுத்ததே கமல்ஹாசன்தானாம்.

ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் பேசும்போது கமல்ஹாசனுக்கும் அவருக்கும் ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவியதாக கூறினார். கமல்ஹாசன் நடித்து சுந்தர் சி இயக்கத்தில் தயாரான திரைப்படம் அன்பே சிவம்.

இந்த படத்தின் க்ளைமேக்ஸில் அனைத்தையும் விட்டு விட்டு இறுதியில் அனாதையாக கமல்ஹாசன் செல்வதாக பட காட்சிகள் இருக்கும். இதை கேட்ட கே.எஸ் ரவிக்குமார் அப்படி க்ளைமேக்ஸ் வைத்தால் எப்படி சார் சரியா இருக்கும். சோகமா இல்லாமல் க்ளைமேக்ஸை சந்தோஷமாக முடித்திருக்கலாம். அதுதான் மக்களுக்கு பிடிக்கும் என கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் கமல்ஹாசன் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில் திரையில் வெளியான அன்பே சிவம் திரைப்படம் கே.எஸ் ரவிக்குமாரின் அனுமானத்திற்கு மாற்றாக சிறப்பான வெற்றியை கொடுத்தது.

To Top