Connect with us

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி; ரஜினியை டார்கெட் செய்யும் விஜய்? – Badass பாடல் வரிகள் ட்ரெண்டிங்!

leo vijay jailer rajini

News

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி; ரஜினியை டார்கெட் செய்யும் விஜய்? – Badass பாடல் வரிகள் ட்ரெண்டிங்!

Social Media Bar

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து ரிலீஸுக்கு தயாராகியுள்ள படம் லியோ. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு 30ம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென படக்குழுவினர் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளனர். இதற்கு பின்னர் அரசியல் அழுத்தம் இருப்பதாக விஜய் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

ஆடியோ வெளியீட்டு விழா நடக்காததால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று லியோ படத்தின் பேட் ஆஸ் என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியும் உள்ளார்.

முன்னதாக இதே அனிருத் இசையமைத்த ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பட பாடலில் “பேரை தூக்க நாலு பேரு.. பட்டத்தை பறிக்க நூறு பேரு” என்ற வரிகள் இடம்பெற்றது. இது சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் அடைய நினைப்பதால் அவரை மறைமுகமாக தாக்கி இடம்பெற்ற வரிகள் என அப்போதே சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது லியோவின் பேட் ஆஸ் பாடலில் “பெரும்புள்ளிக்கெலாம் முற்றுப்புள்ளி.. குடல் உருவுற சம்பவம் உறுதி” என்ற வரி இடம்பெற்றுள்ளது. மேலும் ”பல ராஜாக்களை பாத்தாச்சுடா.. இவன் கத்தி ரொம்ப கூறு ஆச்சுடா” என்றும் வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகள் ரஜினிகாந்திற்கு பதிலடியாக எழுதப்பட்டதாக இணையவாசிகள் சிலர் கிசுகிசுத்துக் கொண்டாலும், அரசியல் ரீதியாக விஜய்க்கு இருக்கும் அழுத்தங்களை மையப்படுத்தி சில அரசியல் வாதிகளை பகடி செய்வதற்காக அந்த வரிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top