Connect with us

லண்டனுக்கு போனப்ப என்ன பொண்ணு விஷயத்தில் கோர்த்து விட்டுட்டான்!.. வெண்ணிற ஆடை மூர்த்திக்கு மனோ செய்த சம்பவம்!.

vennira aadai murthy mano

Cinema History

லண்டனுக்கு போனப்ப என்ன பொண்ணு விஷயத்தில் கோர்த்து விட்டுட்டான்!.. வெண்ணிற ஆடை மூர்த்திக்கு மனோ செய்த சம்பவம்!.

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் போலவே குரல் வளம் கொண்ட மற்றொரு பாடகர் என்றால் அது பாடகர் மனோ. மனோ பாடும் பாடலுக்கும் எஸ்.பி.பி பாடும் பாடலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அதிகமாக எஸ்.பி.பி மற்றும் மனோ பாடல்களை கேட்டவர்களால் தான் கண்டறிய முடியும்.

அதிகபட்சம் இருவரது குரல் வளமும் ஒரே மாதிரிதான் இருக்கும். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறலாம். சிங்காரவேலன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் மனோ நடித்தும் இருக்கிறார். மிகவும் குறும்புத்தனமான ஒரு பிரபலம் மனோ என்று பலரும் கூறுவது உண்டு.

இந்த நிலையில் அவரைக் குறித்து சுவாரசியமான விஷயம் ஒன்றை வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார். ஒருமுறை ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சென்ற பொழுது வெண்ணிற ஆடை மூர்த்தியும் மனோவும் சேர்ந்து லண்டனுக்கு சென்றிருந்தனர்.

அப்பொழுது லண்டனில் இருந்த வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரு பெண்ணிடம் இருந்து போன் வந்தது. அந்த பெண் வெண்ணிற ஆடை மூர்த்தியின் பெரும் ரசிகை என்றும் வெகு நாட்களாகவே அவரிடம் பேச வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வந்த போன்:

இவ்வாறெல்லாம் கூறவும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரே ஆச்சரியமாக இருந்துள்ளது. ஏனெனில் ஒரு காமெடி நடிகராக இருப்பதால் அவருக்கு ரசிகை என கூறியெல்லாம் யாருமே போன் செய்தது கிடையாது. இந்த நிலையில் லண்டனில் இருந்து நமக்கு ஒரு ரசிகை இருக்கிறார் என்று வெண்ணிற ஆடை மூர்த்தியும் மிகவும் ஜாலியாக அவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

பிறகுதான் தெரிந்திருக்கிறது அப்படி பேசியது பாடகர் மனோ தான் என்று இதனால் மிகுந்த கோபத்தில் இருந்திருக்கிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி. இந்த நிலையில் திரும்ப சென்னைக்கு வந்த பிறகு மீண்டும் ஒரு பெண்ணிடம் இருந்து அவருக்கு போன் வந்துள்ளது.

அவரும் போனை எடுத்துப் பேசவும் அதேபோல வெண்ணிற ஆடை மூர்த்தியின் நீண்ட நாள் ரசிகை என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தி இருக்கிறார் அந்த பெண். இதனால் கடுப்பான வெண்ணிற ஆடை மூர்த்தி திரும்பவும் இந்த மாதிரி எல்லாம் பேசினால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி விட்டு ஃபோனை வைத்திருக்கிறார்.

அதன் பிறகு தான் தெரிந்திருக்கிறது அப்போது போன் செய்தது மனோ கிடையாது நிஜமாகவே ஒரு ரசிகை என்று இப்படி எல்லாம் சேட்டை செய்யக்கூடியவர் மனோ என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

POPULAR POSTS

sree leela
modi sathyaraj
vengat prabhu goat
gv prakash ar rahman
sathyaraj ks ravikumar
tamil actress
To Top