Bigg Boss Tamil
சிக்குனா சிக்கனு!.. ஸ்மால் ஹவுஸ் வீட்டுக்கு பயந்து மாயா செஞ்ச காரியம்!.. தேவையா இது!
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் துவங்கியது முதலே மாயாதான் அதற்கு கேப்டனாக இருந்து வருகிறார். மாயா கேப்டனாக பதவியேற்றதில் இருந்து பிக்பாஸே ஒரே சண்டையாக போய் கொண்டுள்ளது. முக்கியமாக மாயா வைல்ட் கார்டு மூலமாக வந்த போட்டியாளர்களை டார்கெட் செய்து தாக்கினார்.
இதில் முக்கியமாக அர்ச்சனாவை டார்கெட் செய்து தாக்கி வந்தார். வார தொடக்கத்தில் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்குவதற்காக அர்ச்சனாவையும், மாயாவையும் அனுப்பினார்கள், அர்ச்சனா வீட்டிற்கு தேவையான அளவில் நிறைய பொருட்களை எடுத்தார்.
ஆனால் மாயா அந்த அளவிற்கு சரியாக பொருட்களை எடுக்கவில்லை. ஆனால் அர்ச்சனாதான் சரியாக பொருட்களை எடுக்கவில்லை என கூறி அவர் மீது பழியை போட்டார். அதனை தொடர்ந்து அர்ச்சனா இவர்கள் பேச்சால் இரண்டு முறை அழுதார்.
பிறகு விசித்ராவின் சப்போர்ட்டால் தற்சமயம் இறங்கி அடித்து வருகிறார் அர்ச்சனா. இந்த நிலையில் பொருள் வாங்கிய பில்லை கொடுத்தால் அதை வைத்து யார் அதிகம் வாங்கினார்கள் என கண்டுப்பிடித்துவிடலாம் என ஸ்மால் ஹவுஸில் இருந்து பில்லை கேட்டு வருகின்றனர்.
ஆனால் மாயா அந்த பில்லை கொடுத்தால் பிரச்சனை வரும் என்று பயந்துக்கொண்டு கொடுக்காமலே இருந்து வருகிறார்.