Cinema History
MGR: மதுரை பொதுக்கூட்டத்தில் பெண்களை காப்பாற்ற எம்.ஜி.ஆர் செய்த செயல்!.. இப்படியும் நடந்துச்சா…
Actor MGR : தமிழ் சினிமாவிலும் பொது மக்களாலும் பெரிதாக கொண்டாடப்பட்ட ஒரு மனிதர் என்றால் அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. ஏனெனில் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திலுமே பாமர மக்களில் ஒருவராகதான் தன்னை காட்டிக் கொள்வார்.
ஒரு படகோட்டியாகவோ அல்லது ஒரு ரிக்ஷாக்காரனாகவோ தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு அந்த மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் நடிப்பதாலேயே அவர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார் எம்.ஜி.ஆர்.
மேலும் அவர் முதலமைச்சர் ஆன பொழுதும் தொடர்ந்து அந்த மக்களுக்கு இலவச ரிக்ஷாக்கள் வழங்குவது இலவச தையல் மிஷின்கள் வழங்குவது போன்றவற்றை செய்ததால் அந்த மக்கள் எப்போதுமே எம்.ஜி.ஆரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் என்று கூறலாம். இதனால் எம்.ஜி.ஆர் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார்.
பொதுவாக எம்.ஜி.ஆர் பொதுக்கூட்டம் நடத்தினார் என்றால் பெரும் திரளான மக்கள் அந்த கூட்டத்திற்கு வருவதுண்டு. ஆண்கள் பெண்கள் என இருவரும் வருவதால் இருவரும் தனித்து உட்கார வைப்பதற்கான அனைத்து விஷயங்களையும் எம்.ஜி.ஆர் செய்திருப்பார். பெண்கள் ஒரு பக்கமாகவும் ஆண்கள் ஒரு பக்கமாகவும் அமரும் படி அந்த பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருக்கும்.
இந்த நிலையில் மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு சென்ற எம்.ஜி.ஆர் அங்கு அளவுக்கு அதிகமாக மக்கள் வந்திருப்பதை கண்டு கொண்டார் கூட்டம் நிறைவு பெறும் வேலையில் கூட்டத்தில் இருக்கும் ஆண்களுக்கு நான் ஒன்று கூறவேண்டும் எனவே பெண்கள் முதலில் கிளம்பலாம் என்று கூறினார் எம்.ஜி.ஆர்.
சரி என்று பெண்கள் எல்லாம் முதலில் பொறுமையாக கிளம்பி சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு ஆண்களைப் பார்த்து இப்போது நீங்களும் கிளம்பலாம் கூட்டம் நிறைவுற்றது என்று கூறியிருக்கிறார் எம்.ஜி.ஆர் ஏன் இப்படி செய்தார் என யோசிக்கும்போது பெண்களும் ஆண்களும் ஒரே நேரத்தில் கூட்டத்தை விட்டு கிளம்பினால் அது பெண்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தலாம். அவர்கள் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்ளலாம் எனவேதான் முதலில் பெண்களை அனுப்பி விட்டு பிறகு அவர்களை அனுப்பினேன் என்று கூறியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.