Cinema History
நடிகை உதைத்ததால் முகத்தில் அடிப்பட்டு ரத்தம்.. எம்.ஆர் ராதாவிற்கு நடந்த சம்பவம்!..
MR Radha: தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமான வில்லன் நடிகர் என்றால் அது எம்.ஆர் ராதாதான். எம்.ஆர் ராதா நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படங்களுக்கு அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. அதையும் தாண்டி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே எம்.ஆர் ராதா தனியாக நாடக கம்பெனி நடத்தி வந்தார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரியான பெரும் நடிகர்களே அந்த நாடக கம்பெனியில் பணிப்புரிந்துள்ளனர். இதனால் அப்போது சினிமாவில் எம்.ஆர் ராதா மீது மற்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. பழம்பெரும் நடிகை எம்.என் ராஜம்.
இவருக்கு முக்கியமான அடையாளமாக அமைந்த திரைப்படம் இரத்த கண்ணீர். இரத்த கண்ணீர் திரைப்படத்தில் இவர் காந்தா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ஒரு காட்சியில் எம்.ஆர் ராதாவை எட்டி உதைப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
அவ்வளவு பெரிய கலைஞரை காலால் எட்டி உதைப்பதா நடிப்புக்கு கூட அதை என்னால் செய்ய முடியாது என கூறி மறுத்துவிட்டார் எம்.என். ராஜம். இதனால் இயக்குனரும் காட்சியை மாற்றி எழுதினார். ஆனால் இது எம்.ஆர் ராதாவிற்கு பிடிக்கவில்லை.
நீ எட்டி உதைத்தால்தான் அந்த காட்சி சிறப்பாக இருக்கும் என கோபமாக கூறியுள்ளார். சரி என கே.என் ராஜமும் அந்த காட்சியில் எட்டி உதைக்க நடிப்புக்காக எம்.ஆர் ராதா அலறிக்கொண்ட படிக்கட்டுகளில் உருண்டு வந்து கீழே விழுவார்.
அப்படி அவர் விழும்போது அவரது முகத்தில் நிஜமாகவே அடிப்பட்டு ரத்தம் வந்தது. இருந்தாலும் நடிப்பாக அதை சிறப்பாக செய்துவிட்டு பிறகு மருத்துவமனைக்கு கிளம்பினார் எம்.ஆர் ராதா.