Cinema History
நானே எந்திரிக்க வழி இல்லாம இருக்கேன்!.. இதுல ஜோக்கு கேக்குதா!.. நாகேஷால் கடுப்பான வாலி!..
Actor Nagesh: தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நாகேஷ். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இப்போது உள்ளதை விடவும் காமெடி நடிகர்களுக்கு இடையே போட்டிகள் அதிகமாக இருந்தன.
பொதுவாக கதாநாயகர்கள் ஆக நடிக்கும் நடிகர்களுக்குள் தான் போட்டி இருக்கும் காமெடி நடிகர்களுக்குள் அப்படி என்ன போட்டி இருக்கும் என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்தே தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற பல காமெடி நடிகர்கள் சிறப்பாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்ததார்கள்.
நாகேஷ் இருக்கும் போது காமெடி நடிகர்களுக்கு இடையே பெரும் போட்டி இருந்தது. இருந்தாலும் கூட பெரும் நடிகர்கள் படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அதற்கு முக்கிய காரணம் அவருடைய தனிப்பட்ட உடல்மொழி என்று சொல்லலாம்.
நாகேஷ் செய்த காமெடி:
பேசுவதன் மூலமாக காமெடி செய்வது ஒருவகை காமெடி என்றாலும் உடல் மொழிகள் மூலமாகவே காமெடி செய்யும் ஒரு திறன் கொண்டவர் நாகேஷ். மற்ற காமெடி நடிகர்களுக்கு அந்த திறன் கிடையாது. சொல்ல போனால் அப்போது சந்திரபாபுவிற்கும் நாகேஷுக்கும் மட்டுமே அந்த திறன் இருந்தது.
இதனாலேயே நாகேஷ் பிரபலமாக இருந்தால் அப்போது இருந்த பல பிரபலங்கள் அவருடன் நெருக்கமான நட்பில் இருந்தனர் எம்.ஜி.ஆர் உட்பட இந்த நிலையில் வாலி அவருடன் நடந்த ஒரு சம்பவத்தை தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
ஒருமுறை வாலி குளியலறைக்கு செல்லும் பொழுது அங்கு கால் தவறி கீழே விழுந்து விட்டார். அப்பொழுது அங்கு வந்த நாகேஷ் பார்த்துவிட்டு படுத்து தூங்குவதற்கு எவ்வளவு இடம் இருக்கிறது இங்கு வந்து படுத்து கிடக்கிறாய் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை கேட்டு கடுப்பான வாலி நானே எழ முடியாமல் கிடக்கிறேன்.. உனக்கு காமெடியாக இருக்கிறதா என கேட்டுள்ளார்?.
அந்த அளவிற்கு நிஜ வாழ்க்கையிலும் எதையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் ஒரு திறன் கொண்டவர் நாகேஷ் என்று கூறியிருக்கிறார் வாலி.