Bigg Boss Tamil
விச்சித்திராவிற்கு ஆதரவாக பூர்ணிமாவின் அம்மா!.. அதிர்ச்சியில் பூர்ணிமா.. அட கொடுமையே!..
Biggboss season 7 Update : பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 துவங்கி கிட்டத்தட்ட இறுதி நிலைக்கு வந்துவிட்டது. இதுவரை 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே முக்கிய போட்டியாளராக மாயா, பூர்ணிமா, விச்சித்திரா ஆகியோர் இருந்து வருகின்றனர். பலமுறை எலிமினேஷன் நடந்தப்போதும் கூட இவர்கள் யாருமே எலிமினேஷன் ஆகவில்லை.
முக்கியமாக தொடர்ந்து கமல்ஹாசன் பூர்ணிமாவை தாக்கி வந்தப்போது கூட பூர்ணிமா உறுதியாக விளையாடி வந்தார். மாயாவுடன் கூட்டு சேர்ந்து கடந்த சில வாரங்களில் மிகவும் கெட்ட பெயரை பெற்றார் பூர்ணிமா. முக்கியமாக பூர்ணிமாவிற்கு முக்கிய எதிரியாக அர்ச்சனா மற்றும் விச்சித்திரா இருந்தனர்,
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் பாராட்டும் வகையில் பெரும் அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார் பூர்ணிமாவின் தாய். ஆம் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களின் பெற்றோர்களை வரவழைத்திருந்தனர். அதில் பூர்ணிமாவின் அம்மா விச்சித்திரா மீது பெரும் அன்பு கொண்டவர் என தெரிகிறது.
அவர் விச்சித்திராவை பார்த்த உடனேயே என் மகள் ஏதாவது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அவளை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியாகியுள்ளார் பூர்ணிமா. அதே போல அர்ச்சனாவை கட்டிப்பிடித்து விசாரித்துள்ளார் பூர்ணிமாவின் அம்மா.
இதனால் பூர்ணிமாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகியுள்ளது. அதே போல என்னடா நடக்குது இங்க என வடிவேலு பாணியில் மணியை கேள்வி கேட்டு திகில் கொடுத்துள்ளார் ரவீனாவின் அம்மா. பிக்பாஸ் வீட்டில் இப்படி முழுவதுமாக பெற்றோர் வந்ததால் இன்றைய பிக்பாஸ் களை கட்டியுள்ளது.