Latest News
கிண்டல் பண்றாரா புகழ்ராறான்னு தெரியலையே!.. இளையராஜா வைரமுத்து குறித்து கருத்து தெரிவித்த சீனு ராமசாமி!..
தமிழ் சினிமாவில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை திரைப்படமாக காட்டக்கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் விஜய் சேதுபதியை வைத்து அதிக படங்கள் இயக்கியுள்ளார். தற்சமயம் நடந்து வரும் இளையராஜா வைரமுத்து பிரச்சனை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.
இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான உரிமத்தை அவருக்கே தர வேண்டும் என கூறி வெகு காலமாக அதற்காக போராடி வருகிறார். ஆனால் ஒரு பாடல் என்பது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமா இல்லை இசையமைப்பாளருக்கு சொந்தமா என்பதே இங்கு பெரும் கேள்வியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாடல் வரிகள் எல்லாம் ஒரு பாடல் எப்படி முழுமை பெறும் என்று தனது கருத்தை முன் வைத்தார் வைரமுத்து. அதில் அவர் கூறும்போது பாடல் வரிகளும் இசையும் சேர்ந்தால்தான் பாடல். ஏதேனும் ஒன்று மட்டும் இருந்தால் அது எப்படி பாடலாகும் என கூறியிருந்தார்.
இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் இதற்கு பதிலளிக்கும்போது வைரமுத்துவை வளர்த்து விட்டதே இளையராஜாதான். இல்லை என்றால் இப்போது உள்ள வாழ்க்கை வைரமுத்துவிற்கு இருக்காது. ஆனால் இப்போது வைரமுத்து இளையராஜாவையே விமர்சித்து பேசுவது சரி கிடையாது என தனது கருத்தை முன் வைத்தார் .
இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சீனு ராமசாமி எக்ஸ் தளத்தில் ”உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய டம்மி லிரிக்ஸ் ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்” என்று பதிவிட்டுள்ளார் சீனுராமசாமி.