Gossips
பொண்டாட்டியை விட்டுட்டு நடிகை சகவாசம்… இப்போ பிச்சை எடுக்கும் நடிகர்.. ரத்த கண்ணீர் படம் மாதிரி ஆயிடுச்சா..!
வெள்ளித்திரை எவ்வளவு பிரபலமாக உள்ளதோ அதே அளவிற்கு தற்பொழுது சின்னத்திரையும் பிரபலமாக இருக்கிறது. வெள்ளித்திரைக்கு என்று தனி ரசிகர்கள் ஒரு பக்கம் என்றாலும், சின்னத்திரை சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆண்களும் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் அது ஆச்சரியம் தான். அந்த அளவிற்கு தற்பொழுது சின்னத்திரை, வெள்ளித்திரைக்கு இணையாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
வெள்ளித்திரையில் எவ்வாறு கள்ளத்தொடர்புகளும், அட்ஜஸ்ட்மெண்ட்களும் இருப்பது போல தற்பொழுது சின்னத்திரையிலும் இது தலை தூக்க ஆரம்பித்துவிட்டது என்று கிசுகிசுக்கப்படுகிறது.
தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு ட்ரெண்டிங் ஆவதும், மீண்டும் அவர்கள் சீரியலில் நடிப்பதும் வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் சீரியலில் கடவுள் பெயர் கொண்ட நடிகரும், அவருடன் இணைந்து நடித்த கடவுள் பெயர் கொண்ட நடிகையை பற்றிய கிசுகிசுகள் தற்பொழுது தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
சின்னத்திரையில் ஒரு கள்ளத்தொடர்பு
கடவுள் பெயர் கொண்ட அந்த நடிகர்இ அதே கடவுள் பெயர் கொண்ட சீரியல் நடிகை மீது காதல் கொண்டிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
தற்பொழுது இருவரும் கணவன் மனைவியாக சீரியலில் நடித்து வரும் நிலையில் கடவுள் பெயர் கொண்ட அந்த நடிகருக்கு நிஜத்தில் திருமணம் ஆகி உள்ளது.

ஆனால் தற்பொழுது நடித்து வரும் அந்த நடிகையுடன் கள்ளத்தனமாக இவர் பழகி வருவதாக பேச்சுகள் வந்த வண்ணம் உள்ளன.
களத்தில் இறங்கிய மனைவி
இதனை அறிந்த அந்த கடவுள் பெயர் கொண்ட நடிகரின் மனைவி பல குற்றச்சாட்டுகளை தன்னுடைய கணவர் மீதும், அந்த நடிகை மீதும் சுமத்தி வருகிறார்.
மேலும் இந்த விஷயத்தை அவர் மீடியா வரை எடுத்துச் சென்றுள்ளார். அதில் அவர் என்னுடைய கணவனுக்கு அந்த நடிகை சட்டை வாங்கி கொடுக்கிறார். என்னுடைய கணவருக்கு பிறந்தநாள் அவள் ஏன் கொண்டாட வேண்டும்? என பல கேள்விகளை முன்வைத்து பேசி வருகிறார் கடவுள் பெயர் கொண்ட நடிகரின் மனைவி.

இவ்வாறு கூறிய நடிகரின் மனைவி, தன் கணவர் பழகும் அந்த கடவுள் பெயரைக் கொண்ட நடிகை தன்னுடைய தோழிதான் எனவும் அதிர்ச்சி கிளப்பி உள்ளார். மேலும் அவள் எனக்கே துரோகம் செய்ய பார்க்கிறாள் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
டாடா காட்டிய காதலி..! பிச்சை எடுக்கும் நடிகர்..!
இவ்வாறு பேசப்பட்டு வந்த நிலையில் கடவுள் பெயர் கொண்ட நடிகை தற்பொழுது ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அந்த கடவுள் பெயர் கொண்ட நடிகர் தற்பொழுது எங்கு செல்வது என்று தெரியாமல் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு, சேமித்து வைத்த பணத்தை செலவு செய்து விட்டு தற்பொழுது சீரியல் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார் என தெரியவந்துள்ளது.
