Connect with us

தேவையில்லாத ஆணியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது!.. பத்திரிக்கையாளர்களிடம் சீறிய சித்தார்த்…

siddharth

Cinema History

தேவையில்லாத ஆணியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது!.. பத்திரிக்கையாளர்களிடம் சீறிய சித்தார்த்…

Social Media Bar

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

இறுதியாக அவர் நடித்த டக்கர் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை அதனை தொடர்ந்து மீண்டும் வேறு படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்திற்கு தென்னிந்தியா முழுவதுமே வரவேற்பு உண்டு.

அவருக்கு தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அரசியல் சார்ந்த அவரது நிலைபாட்டை எப்பொழுதும் வெளிப்படுத்தி விடுவார் நடிகர் சித்தார்த்.

அந்த வகையில் எப்போதும் பாஜக கட்சிக்கு எதிரான மனநிலையை கொண்டவர் சித்தார்த் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். எனவே பத்திரிகையாளர்கள் எப்போது அவரை சந்தித்தாலும் அவரிடம் பாஜக குறித்த கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இந்த வகையில் தற்சமயம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக சென்னைக்கு வந்திருந்தார் சித்தார்த் அவரிடம் பத்திரிகையாளர்கள் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற இருப்பது குறித்து கேட்டனர். அதற்கு தேவையில்லாத ஆணியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்ன விஷயமாக வந்திருக்கோ அந்த கேள்வியை மட்டும் கேளுங்கள் என கூறிவிட்டார்…

Articles

parle g
madampatty rangaraj
To Top