Connect with us

சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

News

சிவகார்த்திகேயன் காட்டுல இனி அடைமழைதான், அந்த மாஸ் ஹீரோ பட இயக்குனரையே வளைச்சிப்போட்டாரே, SK 25 பட டைரக்டர் இவர்தானாம்?

Social Media Bar

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ வீரராக நடித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் சமீப காலமாகவே தனது வழக்கமான டிரெண்டை விட்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். “மாவீரன்”, “அயலான்” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் அவர் நடித்து வரும் 21 ஆவது திரைப்படமும் வித்தியாசமான கதைக்களத்தை உடையது என தெரிய வருகிறது.

“SK 21” திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸுடன் கைக்கோர்க்கவுள்ளார் என்பது ஓரளவு உறுதியான தகவலாகவே பரவி வருகிறது. ஆனால் அது சிவகார்த்திகேயனின் 22 ஆவது படமா? அல்லது 23 ஆவது படமா? என்பது இதுவரை உறுதியாகவில்லை.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தனது 25 ஆவது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்க்கவுள்ளாராம்.

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து “G.O.A.T” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. “G.O.A.T” திரைப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சிவகார்த்திகேயனும் “டான்” பட இயக்குனரான சிபி சக்ரவர்த்தியும் இணைய உள்ளதாக ஒரு தகவல் பரவி வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

வெங்கட் பிரபு, அஜித், சூர்யா, கார்த்தி, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர்களின் வரிசையில் கோலிவுட்டின் டாப் ஸ்டாரான விஜய்யை வைத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், அதற்கடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் வெங்கட் பிரபு கைக்கோர்க்கவுள்ளார் என கூறப்படுகிறது. இத்தகவல் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் “G.O.A.T” திரைப்படம் வெளியான பிறகு அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top